கடலுக்கு அடியில் கோடிக்கணக்கான தங்கப் புதையல்! ஒரே இரவில் காணாமல் போன மர்ம நகரம் அட்லாண்டிஸ்!

இந்த நகரத்தில் இருந்த மக்கள் ரொம்பவும் மேம்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அங்கு தங்கம், வெள்ளி, மற்றும் பல அரிய உலோகங்கள் நிறைந்திருந்தன
mysterious Atlantis city
mysterious Atlantis city
Published on
Updated on
1 min read

அட்லாண்டிஸ் நகரம் என்பது உலகின் எல்லா வரலாற்றிலும் ஒரு பெரிய மர்மமாக நீடிக்கும் ஒரு பெயர். இந்த நகரம் உண்மையிலேயே இருந்தது என்று சிலரும், அது ஒரு கற்பனைக் கதை என்று வேறு சிலரும் நம்புகிறார்கள். இந்த நகரத்தைப் பற்றி முதன்முதலாகப் பேசியது, உலகப் புகழ்பெற்ற கிரேக்க தத்துவஞானியான பிளாட்டோதான். அவருடைய டிமேயஸ் மற்றும் கிரிட்டியாஸ் என்ற புத்தகங்களில்தான் இந்த நகரத்தைப் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பிளாட்டோ என்ன சொல்கிறார் என்றால், இந்த அட்லாண்டிஸ் நகரம் சுமார் 9,000 வருடங்களுக்கு முன்னால், ஹெர்குலிசின் தூண்கள் எனப்படும் இடத்துக்கு அப்பால், அதாவது அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த ஒரு பெரிய தீவு நகரம் என்று கூறுகிறார். இந்த நகரத்தில் இருந்த மக்கள் ரொம்பவும் மேம்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அங்கு தங்கம், வெள்ளி, மற்றும் பல அரிய உலோகங்கள் நிறைந்திருந்தன. அவர்கள் மிக நவீனமான கட்டிடங்கள், பெரிய அரண்மனைகள், கடவுள்களுக்கான கோவில்கள் என எல்லாம் கட்டி இருந்தார்கள். அவர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ரொம்பவே முன்னேறியதாக இருந்தது.

ஆனால், இந்த மக்கள் காலப்போக்கில் ஆடம்பரத்திலும், சுயநலத்திலும் மூழ்கி, தங்கள் கடவுளை மறந்தார்கள். இதனால் தெய்வீக சக்திக்கு அவர்கள் மீது கோபம் வந்தது. விளைவு என்னவென்றால், ஒரே ஒரு பகலிலும், இரவிலும் வந்த ஒரு பெரிய பூகம்பம் மற்றும் வெள்ளத்தால் அந்த நகரம் முழுவதுமாகக் கடலுக்குள் மூழ்கிப் போனது என்று பிளாட்டோ எழுதியிருக்கிறார். இதுதான் அட்லாண்டிஸ் பற்றிய கதை.

பிளாட்டோ இந்த நகரத்தைக் கண்ணால் பார்த்ததில்லை. அவர் ஒரு கதை மூலமாக, நல்ல ஒழுக்கங்கள் கொண்ட ஒரு சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்றும், ஆடம்பரம் தலைதூக்கினால் என்ன நடக்கும் என்றும் பாடம் சொல்லத்தான் இந்தக் கதையைப் புனைந்தார் என்று சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். ஆனா, பல துணிச்சலான ஆய்வாளர்கள் இந்த நகரம் உண்மையிலேயே இருந்தது என்று நம்புகிறார்கள்.

அதனால், இன்று வரைக்கும் கடலின் அடியில், இந்த அட்லாண்டிஸ் நகரம் எங்காவது இருக்கிறதா என்று பல ஆய்வுகளும், பயணங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நகரம் உண்மையிலேயே இருந்தால், அது உலக வரலாற்றையே மாற்றியமைக்கும் ஒரு நிகழ்வாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த மர்மமான நகரத்தைப் பற்றிய தேடல் இன்று வரைக்கும் பலருக்கும் ஒரு பிடித்தமான விஷயமாக நீடித்து வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com