"டைட்டானிக் மூழ்கிய போது 'குடித்துவிட்டு' உயிர் பிழைத்த அந்த ஒரு நபர்! மைனஸ் டிகிரி குளிரில் எல்லோரும் உறைந்து சாக.. இவர் மட்டும் எப்படி தப்பித்தார்?"

தலையில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூடப் படாமல் அவர் கடலுக்குள் நழுவியதாகப் பின்னாளில் சாட்சியம் அளித்தார்...
"டைட்டானிக் மூழ்கிய போது 'குடித்துவிட்டு' உயிர் பிழைத்த அந்த ஒரு நபர்! மைனஸ் டிகிரி குளிரில் எல்லோரும் உறைந்து சாக.. இவர் மட்டும் எப்படி தப்பித்தார்?"
Published on
Updated on
2 min read

1912-ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று இரவு, உலகின் மிகப்பெரிய கப்பலான டைட்டானிக் பனிப்பாறையில் மோதி மூழ்கிக்கொண்டிருந்தது. சுமார் 1,500 பேர் அந்த விபத்தில் உயிரிழந்தனர். பெரும்பாலானோர் நீரில் மூழ்கி இறப்பதை விட, அட்லாண்டிக் கடலின் உறைய வைக்கும் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் குளிரில்தான் (Hypothermia) மரணமடைந்தனர். ஆனால், அந்த நரகத்திலும் ஒரு மனிதர் மட்டும், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அந்த ஐஸ் தண்ணீரில் நீந்தியும், மிதந்தும் உயிர் பிழைத்தார். அவருக்குத் தலைமுடி கூட நனையவில்லை என்று சொன்னால் நம்புவீர்களா? அவர் பெயர் சார்லஸ் ஜோகின் (Charles Joughin). அவர் அந்தக் கப்பலின் தலைசிறந்த பேக்கர் (Baker).

கப்பல் மூழ்கத் தொடங்கியதும், சார்லஸ் பதற்றமடையவில்லை. அவர் தனது அறையில் இருந்த விஸ்கி மற்றும் மது பாட்டில்களை எடுத்து அளவுக்கு அதிகமாகக் குடித்தார். பின்னர், பெண்களுக்குக் குழந்தைகளுக்கும் லைஃப் போட்களில் ஏற உதவினார். லைஃப் போட்கள் தீர்ந்துவிட்ட நிலையில், அவர் கப்பலின் மேல் தளத்திற்குச் சென்று, அங்கே இருந்த நாற்காலிகளைத் தூக்கி கடலில் வீசினார், மற்றவர்கள் அதைப் பிடித்துக்கொள்ள உதவும் என்று. கப்பல் முழுவதுமாக செங்குத்தாக நீரில் மூழ்கும் கடைசி நிமிடம் வரை அவர் கப்பலின் நுனியில் நின்றுகொண்டிருந்தார். கப்பல் கடலுக்குள் சென்றதும், அவர் நிதானமாகத் தண்ணீரில் இறங்கினார். தலையில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூடப் படாமல் அவர் கடலுக்குள் நழுவியதாகப் பின்னாளில் சாட்சியம் அளித்தார்.

பொதுவாகக் குளிர்ந்த நீரில் விழுந்தால், உடல் நடுக்கம் எடுத்து, ரத்த ஓட்டம் குறைந்து, இதயம் நின்றுவிடும். ஆனால் சார்லஸ் அதிகப்படியான மது அருந்தியிருந்ததால், அவருக்குக் குளிர் தெரியவில்லை என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அறிவியல் ரீதியாக, மது அருந்தினால் உடல் வெப்பம் வெளியேறி, ஹைபோதர்மியா இன்னும் வேகமாகத் தாக்கும். அப்படியிருக்க இவர் எப்படிப் பிழைத்தார்? மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால், அவர் குடித்த மது அவருக்கு ஒருவிதமான பயமற்ற தைரியத்தைக் கொடுத்தது. பயம் இல்லாவிட்டால் உடல் பதற்றமடையாது, ஆற்றல் வீணாகாது. அவர் மிகவும் நிதானமாகத் தண்ணீரில் மிதந்துகொண்டே இருந்தார். அந்த அமைதியே அவரது உடல் வெப்பத்தைத் தக்கவைக்க உதவியிருக்கலாம்.

விடியற்காலை வரை அவர் அந்த இருண்ட, குளிர்ந்த கடலில் மிதந்துகொண்டிருந்தார். பின்னர், கவிழ்ந்து கிடந்த ஒரு லைஃப் போட்டின் ஓரத்தில் தொற்றிக்கொண்டு உயிர் பிழைத்தார். கரடுமுரடான அந்தச் சூழலில், மரணத்தை நேருக்கு நேர் சந்தித்தும், சிறிதும் கலங்காமல், ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் குடிக்காமல் (கடல் நீர்), மதுவின் போதையிலும் மன உறுதியிலும் அவர் செய்த சாதனை இன்றும் வரலாற்றில் ஒரு விசித்திரமாகப் பார்க்கப்படுகிறது. டைட்டானிக் விபத்தில் பிழைத்த கடைசி நபர் இவர்தான் என்று கூறப்படுகிறது. விதியை வெல்லச் சில சமயம் விசித்திரமான பழக்கங்களும் கைகொடுக்கும் போல!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com