தினுஷாவின் அதிரடி சதம்; பௌலர்களை திணறடித்த இலங்கை! இந்தியா தொடரை வென்று சாதனை

சோனல் தினுஷா 196 பந்துகளில் தனது சதத்தைப் பதிவு செய்தார். தனது 4வது சர்வதேச போட்டியை விளையாடும் இவருக்கு இது 3வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினுஷாவின் அதிரடி சதம்; பௌலர்களை திணறடித்த இலங்கை! இந்தியா தொடரை வென்று சாதனை
தினுஷாவின் அதிரடி சதம்; பௌலர்களை திணறடித்த இலங்கை! இந்தியா தொடரை வென்று சாதனை
Published on
Updated on
2 min read

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான 2வது டெஸ்ட் போட்டியை வெற்றிகரமாக சமன் செய்துள்ளது தீவு அணி. தொடரை இந்தியா 1-0 எனக் கைப்பற்றினாலும் இந்த கடைசி நாள் ஆட்டம் இலங்கை ரசிகர்களுக்கு ஆசுவாசமாக அமைந்தது.

சொந்த மண்ணில் ஏற்கெனவே ஒரு போட்டியில் தோற்றுவிட்டதால் இந்த போட்டி இலங்கைக்கு இழக்க முடியாத ஒன்றாக இருந்தது. இந்தியாவின் 503 என்ற இமாலய இலக்கை ஃபாலோ-ஆன் செய்தது.

229 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்திருந்த நிலையில் இன்று காலையை தோல்வியின் விளிம்பில் தான் தொடங்கியது இலங்கை. சோனல் தினுஷா மற்றும் கேஷரா நுவாந்தா களமிறங்கினர்.

தொடரைக் கைப்பற்றிய இந்தியா
தொடரைக் கைப்பற்றிய இந்தியா

இந்த இணை இந்தியப் பந்துவீச்சாளர்களின் பொறுமையைச் சோதித்தது. முதல் செஷன் முழுவதும் விக்கெட் எதுவும் விழவில்லை.

150 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்த நுவந்தாவை மனவ் சுதார் விக்கெட்டாக்கி இந்த இணையைப் பிரித்தார். அடுத்த 10 ஓவர்களில் பிரபாத் ஜெயசூர்யாவின் விக்கெட்டை ரவீந்திர ஜடேஜா வீழ்த்த, இந்திய அணிக்கு மீண்டும் வெற்றி நம்பிக்கை தளிர்த்தது.

அப்போது இலங்கை அணி 142 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால், அடுத்து களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் லஹிரு குமாரா மற்றும் அசிதா பெர்னாண்டோ ஆகிய இருவரும் தினுஷாவிற்கு பக்கபலமாக ஒரு முனையை கச்சிதமாகப் பிடித்துக்கொண்டனர்.

லஹிரு குமாரா 90 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 12 ரன்கள் சேர்க்க, மறுமுனையில் சோனல் தினுஷா 196 பந்துகளில் தனது சதத்தைப் பதிவு செய்தார். தனது 4வது சர்வதேச போட்டியை விளையாடும் இவருக்கு இது 3வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 25 வயது இளைஞனின் விக்கெட்டை எடுக்க இந்த தொடர் முழுவதும் இந்தியா பந்துவீச்சாளர்கள் திணறியுள்ளனர்.

இந்திய அணி
இந்திய அணி

ஜடேஜாவின் பந்துவீச்சில் லஹிரு குமாரா ஆட்டமிழந்தபோது, போட்டியின் நேரமும் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பும் கைநழுவிப் போயிருந்தன. ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் வேறு வழியின்றி இந்திய அணி தனது முதன்மை பேட்டர்களிடம் பந்தைக் கொடுத்தது.

தனது சர்வதேச டெஸ்ட் வாழ்க்கையில் இதற்கு முன் வெறும் 7 பந்துகளை மட்டுமே வீசியிருந்த இந்திய கேப்டன் சுப்மன் கில், 2 ஓவர்களை வீசி இலங்கையின் கடைசி விக்கெட்டை வீழ்த்தும் அளவுக்குச் சென்றார்! யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோரும் தலா ஒரு ஓவர் வீசினர்.

இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டை வீழ்த்திய இந்திய அணி 429 ரன்களை விட்டுக்கொடுத்தது. நாள் முடியும் வரை பேட்டிங்கை இழுத்துச் சென்று போட்டியை சமன் செய்தது இலங்கை அணியைப் பொருத்தவரையில் ஒரு வெற்றிதான்.

இலங்கை அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஃபாலோ-ஆன் கொடுத்து வெற்றி பெறாமல் செல்வது இந்திய அணிக்கு இதுவே முதன்முறை என்பது வருந்தத்தக்க சாதனை!

தினுஷாவின் அதிரடி சதம்; பௌலர்களை திணறடித்த இலங்கை! இந்தியா தொடரை வென்று சாதனை
மேகனஸ் கார்ல்சனை வீழ்த்திய 15 வயது இந்திய சிறுவன்! ஆராவரம் இல்லாமல் தூங்க சென்ற வைரல் சம்பவம்
தினுஷாவின் அதிரடி சதம்; பௌலர்களை திணறடித்த இலங்கை! இந்தியா தொடரை வென்று சாதனை
Dhoni: 25% CSK அணியை ரூ.4000 கோடிக்கு விலை பேசினாரா? - உடைத்து பேசிய முன்னாள் வீரர்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com