"பேட் பேசணும்.. வாய் பேசக் கூடாது" - போட்டி முடிந்த பிறகு.. நாலு வார்த்தையில் நறுக்குன்னு ட்வீட் போட்ட கில்!

இந்திய வீரர்களுக்கு எதிராக ஆக்ரோஷமான சைகைகள் செய்ததோடு, அபிஷேக் ஷர்மாவுடன் நேரடியாக வார்த்தை மோதலில் ஈடுபட்டார்..
"பேட் பேசணும்.. வாய் பேசக் கூடாது" - போட்டி முடிந்த பிறகு.. நாலு வார்த்தையில் நறுக்குன்னு ட்வீட் போட்ட கில்!
Published on
Updated on
2 min read

துபாயில் நடந்த ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில், இந்திய அணி, பாகிஸ்தானை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு, இந்திய இளம் வீரர் சுப்மன் கில் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவு, ரசிகர்களிடையே பெரும் வைரலாகியுள்ளது.

இந்தப் போட்டியின் போது, பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஷாகின் அஃப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃப் ஆகியோர் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோரை சீண்டும் விதத்தில் நடந்துகொண்டனர். ஹாரிஸ் ரவுஃப் பவுண்டரி கோட்டின் அருகில் இருந்து, இந்திய வீரர்களுக்கு எதிராக ஆக்ரோஷமான சைகைகள் செய்ததோடு, அபிஷேக் ஷர்மாவுடன் நேரடியாக வார்த்தை மோதலில் ஈடுபட்டார். அதேபோல, ஷாகின் அஃப்ரிடியும் சில சமயங்களில் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டார். இத்தகைய பதற்றமான சூழலில், இந்திய வீரர்கள் பதற்றமடையாமல், களத்தில் தங்கள் திறமையைக் கொண்டு பதிலளித்தனர்.

போட்டி முடிந்த பிறகு, சுப்மன் கில் தனது சமூக வலைத்தள கணக்கில், போட்டியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைப் பகிர்ந்து, அதன் தலைப்பாக "ஆட்டம் பேசணும், வார்த்தைகள் அல்ல" (Game speaks, not words) என்று நான்கு வார்த்தைகளில் சுருக்கமாகப் பதிவிட்டிருந்தார். இந்த நான்கு வார்த்தைகள், களத்தில் நடந்த அனைத்து மோதல்களுக்கும், இந்திய அணியின் இந்த வெற்றி ஒரு சரியான பதிலாக உணர்த்தியது.

Admin

ஆசிய கோப்பையின் ஆரம்ப போட்டிகளில் சுப்மன் கில்லின் ஆட்டம் சற்று மந்தமாக இருந்தபோதிலும், இந்தப் போட்டியில் அவர் தனது பழைய பார்மிற்குத் திரும்பி, 28 பந்துகளில் 47 ரன்கள் விளாசி, அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அவர் அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து, முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் குவித்து, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் அனைத்து வியூகங்களை முறியடித்தனர். அவரது சிறப்பான ஆட்டத்திறன், குறிப்பாக ஷாகின் அஃப்ரிடியின் பந்தில் அடித்த அருமையான ஷாட்கள், அவரது பேட்டிங் திறமைக்குச் சான்றாக அமைந்தது.

களத்தில் வார்த்தைகள் மூலம் பதிலடி கொடுப்பதற்குப் பதிலாக, சுப்மன் கில் தனது பேட்டிங்கின் மூலம் பதிலடி கொடுத்தது ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அவரது இந்தப் பதிவு, கிரிக்கெட் போட்டியில் வார்த்தைகளை விட, ஆட்டத்திறன் தான் உண்மையான பதில் என்பதை உணர்த்தியது. அதேபோல், அபிஷேக் ஷர்மாவும் தனது சமூக வலைத்தளத்தில், "நீங்கள் பேசுகிறீர்கள், நாங்கள் வெற்றி பெறுகிறோம்" (You talk, we win) என்று பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Admin

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com