கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வேலம்பட்டி கிராமத்தில் அஸ்வினி ராஜ் மாடர்ன் ரைஸ் மில் செயல்பட்டு வருகிறது. இந்த அரிசி ஆலையில் இருந்து தமிழ்நாடு வாணிபக் கழகத்திற்கு ரேஷன் கடைகளுக்கு அரிசி விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த ஆலையில் சுமார் முப்பதுக்கு மேற்பட்ட பீகார் மாநிலம் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கிரண் என்ற பெண் தனது இரண்டு மகள்கள் மற்றும் மகனுடன் அங்கேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
கிரண் தனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் மில்லில் தன்னுடன் பணிபுரியும் முகேஷ் என்பவருடன் கிரணுத்து பழக்கம் ஏற்பட்டு அது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் ராஜா சுகன் கிரணுடன் வாழ வேண்டும் என அவரது மனைவியை தேடி ரைஸ் மில்லுக்கு வந்துள்ளார். மேலும் அவரும் அங்கே வேலைக்கு சேர்ந்து தனது மனைவியுடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
எனவே கிரண் மற்றும் முகேஷினால் முன்பு போல பழக முடியவில்லை என சொல்லப்படுகிறது எனவே கிரண் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த ராஜா சுகனை அவரது மனைவி கிரண் கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்து கொலை செய்துவிட்டு இருவரும் சேர்ந்து சடலத்தை மாந்தோப்பில் வீசியுள்ளனர். பின்னர் அப்பகுதி மக்கள் இறந்த சுகனின் உடலை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தலை மறைவாக இருந்த கிரணை போலீசார் தேடி வருகின்றனர் மேலும் கள்ளக்காதலன் முகேஷ் கல்லாவி போலீசார் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர் அரிசி ஆலையில் பீகார் மாநில தொழிலாளர் கள்ளக்காதல் விவகாரத்தில் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.