க்ரைம்

கள்ளக்காதலை கண்டித்த 15 வயது மகனை கொன்று புதைத்த தாய்.. “இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை” - இரவோடு இரவாக நடந்த கொடூரம்!

மறுநாள் மாலை காவல் நிலையத்திற்கு சென்று காலை முதல் மகனை காணவில்லை என காவல் நிலையத்தில்

Mahalakshmi Somasundaram

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் அதோனி பகுதியை சேர்ந்தவர் கங்கம்மா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சின்ன மல்லையா என்பவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்த நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சின்ன மல்லையா உடல் நல குறைபாட்டால் உயிரிழந்தார். எனவே கங்கம்மா அவரது மூன்று பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த நரசிம்மலு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.

இந்நிலையில் அவ்வப்போது நரசிம்மலு கங்கம்மா வீட்டிற்கு வந்து தனிமையில் இருப்பதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் இதனை அறிந்த கங்கம்மாவின் மூத்த மகனான 15 வயதுடைய வீரேந்திரா அவரது தாயின் செயலை கண்டித்திருக்கிறார். இதனால் அச்சமடைந்த கங்கம்மா அவரது காதலன் நரசிம்மலுவுடன் சேர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் 10 தேதி இரவோடு இரவாக வீரேந்திராவை கொலை செய்து யாருக்கும் தெரியாமல் உடலை சுடுகாட்டில் புதைத்திருக்கிறார். பின்னர் மறுநாள் மாலை காவல் நிலையத்திற்கு சென்று காலை முதல் மகனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் வீரேந்திராவை இரண்டு வருடங்களாக தேடி வந்த நிலையில் கங்கம்மா பணத்திற்கு ஆசைப்பட்டு நீதிமன்றத்தில் “இரண்டு வருடங்களாக போலீசார் மகனை கண்டுபிடிக்கவில்லை” என வழக்கு பதிவு செய்திருக்கிறார. இதனை விசாரித்த நீதிமன்றம் உடனடியாக இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கங்கம்மாவின் செல்போன் கால் ஹிஸ்டரி மூலம் போலீசாருக்கு கங்கம்மாவின் கள்ள காதல் குறித்து தெரியவந்தது. எனவே போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக கங்கம்மாவிடம் விசாரணை நடத்தியதில் அவரே கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது மகனை கொன்று நடனமாடியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து வீரேந்திராவின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்த போலீசார் கங்கம்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது அவருக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த கங்கம்மா நேரு முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கங்கம்மாவின் உடலை அடக்கம் செய்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான கள்ள காதலன் நரசிம்மலுவை தேடி வருகின்றனர். பெட்ரா தாயே கள்ளக்காதலை கண்டித்ததால் 15 வயது மகனை கொன்று புதைத்து இரண்டு வருடங்களாக நாடகமாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.