க்ரைம்

“தந்தையின் மார்பை குத்தி கிழித்த மகன்” - நிலத்தகராறில் நடந்த விபரீதம்.. துடிதுடித்து இறந்த விவசாயி!

பூர்வீக நிலத்தை பங்கு பிரிப்பதில் கருத்து வேறுபாடு இருந்து...

Mahalakshmi Somasundaram

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்துள்ள கொங்கணபுரம் அருகே எருமப்பட்டி கிராமம் மட்டும் பட்டியைச் சேர்ந்தவர் 60 வயதுடைய முத்துவேல். இவர் அதே பகுதியில் உள்ள அவரது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தார். முத்துவேலுவிற்கும் அவரது அண்ணன் மகனான குப்புசாமிக்கும் அவர்களது பூர்வீக நிலத்தை பங்கு பிரிப்பதில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. எனவே இரு குடும்பமும் பேசிக்கொள்ளாமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ஒரே பகுதியில் வசிக்கும் அண்ணன் மகன் குப்புசாமிக்கும் முத்துவேலுவுக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக அடிக்கடி தகர்து ஏற்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கமாக இருந்து வந்தது. அதே போல் நேற்று இரவும் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் விலக்கிவிட்டும் தொடர்ந்து இருவரும் சண்டை போட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த குப்புசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சித்தப்பா முத்துவேலுவின் மார்பகத்தின் மீது சரமாரியாக குத்தியதில் படுகாயமடைந்த முத்துவேல் கீழே சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த முத்துவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த கொங்கணாபுரம் போலீசார் தலைமறைவாக உள்ள குப்புசாமியை தேடி வருவதோடு கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிலத்தகராறில் அண்ணன் மகனே தனது சொந்த சித்தப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் எடப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.