ஜார்ஜியாவைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவர், 16 வயது மாணவருடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதாகவும், கிட்டத்தட்ட 20,000 ஆபாச குறுஞ்செய்திகளைப் பரிமாறிக்கொண்டதாகவும், தன்னுடன் மெக்சிகோவிற்குத் தப்பிச் செல்லுமாறு அவரிடம் கெஞ்சியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ரோஸ்வெல் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும் பின்னர் நிர்வாகியாகவும் இருந்த அமண்டா காட்ஸ், சிறுவனுடன் முறையற்ற பாலியல் தொடர்பு கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குற்றத்திற்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
பிரமாணப் பத்திரத்தின்படி, அந்த மாணவர் புலனாய்வாளர்களிடம், 55 வயதான அந்த கல்வியாளருடன் பலமுறை உடலுறவு கொண்டதாகத் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் இந்த நிகழ்வுகள் அவரது வீட்டிலும், ஜாகுவார் காரின் பின் இருக்கையிலும் நிகழ்ந்துள்ளது என்று கூறியுள்ளார். தான் பிடிபட்டு சிறைக்குச் சென்றுவிடுவோமோ? என்று அந்தப் பெண் தன்னிடம் "உண்மையிலேயே மரண பயத்தில்" இருப்பதாகக் கூறியிருந்தபோதிலும் அவர் இவ்வாறு செய்திருக்கிறார். பிரமாணப் பத்திரத்தின்படி, கடைசியாக காதலர் தினத்தன்று காட்ஸ் அந்தச் மாணவனையும் அவனது குடும்பத்தையும் விடுமுறைக்கு அழைத்தபோது, அங்கு அந்தச் சிறுவனின் தாய், அவர்களது இந்த தகாத உறவை உறுதிப்படுத்தும் தொடர்ச்சியான மனதை உலுக்கும் குறுஞ்செய்திகளைக் கண்டறிந்துள்ளார்.
நள்ளிரவில் குடும்பத்தினர் விடுமுறையை விட்டு வெளியேறிய பிறகு, காட்ஸ் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். “அவனுடைய தாய்க்குத் தன்னைப் பிடிக்காததால், இனி தன் ‘காதலனை’ப் பார்க்க முடியாது” என்று தான் மனமுடைந்து இருப்பதாக அவர் சக ஊழியர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
"இதை வெளிப்படுத்தியபோது, அமண்டா பேசிக்கொண்டிருந்த அந்த ஆண் ஒரு சிறுவன் என்பது இறுதியில் தெரியவந்தது," என்று காவல்துறையினர் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் மற்றும் காதலர் தினத்திற்கு இடையில் அந்த ஜோடி பரிமாறிக்கொண்ட 19,585 குறுஞ்செய்திகளை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதில் அந்த ஆசிரியை, அந்தப் பதின்வயது இளைஞர் மீது தான் தீராத காதல் கொண்டிருப்பதை தெளிவுபடுத்தியிருந்தார்.
பிரமாணப் பத்திரத்தில் பகிரப்பட்ட காதல் ததும்பும் குறுஞ்செய்தி ஒன்றில், “உன் அருகில் உறங்குவதும் நீ உறுமுவதும் எனக்கு எவ்வளவு பிடித்திருந்தாலும், எனக்கு நீ வேண்டும்.. அதை நம்மால் மறைக்க முடியுமா என்று கூட எனக்குத் தெரியவில்லை,” என்று அவர் எழுதியிருந்தாள். நான் உன் மீது பைத்தியமாக இருக்கிறேன்... நான் நிறைய முட்டாள்தனமான காரியங்களைச் செய்திருக்கிறேன். நிறையவே. ஆனால் இது உச்சகட்டமானது என்று அந்த காதல் மெசேஜில் குறிப்பிட்டிருந்தார்.
மற்ற செய்திகளில், உடலுறவு "மகிழ்ச்சியானது" என்றும், அவனுடன் இருப்பதற்காக "எல்லாவற்றையும் விட்டு விலகிச் செல்வேன்" என்றும் அவள் அந்தப் பையனிடம் கூறியிருந்தார். அந்தப் பையன் ஆசிரியரை கைவிட்ட பிறகு, அவர் பதட்டத்துடன் தொடர்ச்சியாகக் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். மேலும், "நான் உன்னை நேசித்தேன். என் வாழ்வில் நடந்தவற்றிலேயே இதுதான் மிகவும் கேவலமான மற்றும் பயங்கரமான விஷயம்," என்று அவர் ஆத்திரத்துடன் குறுஞ்செய்தி அனுப்பியதாக அந்த வாரண்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“காட்ஸ் அந்த மாணவனுடன் மெக்சிகோவுக்குக் குடிபெயர விரும்புவதாக அவரிடம் கூறியிருந்தார், ஆனால் அவர் அதை விரும்பவில்லை, மேலும் அவள் ஏன் அங்கு செல்ல விரும்புகிறாள் என்பதும் அவருக்குப் புரியவில்லை,” என்று அந்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணையின் போது விடுப்பில் அனுப்பப்பட்ட காட்ஸ், ஏப்ரல் 30 அன்று ராஜினாமா செய்தார். பிணைத்தொகை $25,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்