ஜப்பானின் மிகவும் கொடூரமான மற்றும் மனநிலை பிறழ்ந்த தொடர் கொலைகாரர்களில் ஒருவன், சிறு குழந்தைகளைக் கொலை செய்து, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து, உடல்களைத் துண்டாக்கிய குற்றம் காண்போரை நடுங்கச் செய்தது.
"ஒட்டாகு கொலையாளி" என்று அழைக்கப்படும் சுடோமு மியாசாகி, 1988-ல் நடந்த தொடர்ச்சியான கொடூரமான தாக்குதல்களின் போது நான்கு சிறுமிகளின் மரணங்களுக்குக் காரணமாக இருந்துள்ளார். அனிமே மற்றும் ஆபாசப் படங்களின் மீது தீராத மோகம் கொண்ட அந்த தொடர்கொலையாளி, பிணப்புணர்ச்சி மற்றும் நரமாமிச உண்ணுதல் போன்ற கொடூரச் செயல்களிலும் ஈடுபட்டுள்ளார். மேலும், தனது அரக்கத்தனமான செயல்களுக்காக சிறிதும் வருந்தவில்லை.
டோக்கியோவில் மியாசாகியின் ஆரம்பகால வாழ்க்கை கடுமையான மன அதிர்ச்சிகளால் நிறைந்திருந்தது. அவரது தந்தைக்கும் மூத்த சகோதரிக்கும் இடையேயான முறையற்ற உறவின் விளைவாக அவர் பிறந்தார் என்ற வதந்திகள் பரவின. இதனால் அவர் தொடர்ச்சியான கேலிக்கு ஆளானார்.மேலும், அவன் தன் சகோதரி குளித்துக் கொண்டிருந்தபோது அவரை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவரின் சகோதரியும், தாயும் அவரை கேள்வி கேட்டபோது, அந்த இரு பெண்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளார். தனக்கு ஆதரவாக இருந்த அவரின் அன்புக்குரிய தாத்தாவின் மரணத்திற்கு பிறகு, 26 வயதில் அவரது கொலைவெறித் தாக்குதல் தொடங்கியது. இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வுகள்தான் இறுதியில் அவரை மனநிலை பிறழச் செய்தது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
தன் தாத்தாவின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு, அவருடன் நெருக்கமாக உணர்வதற்காகவும், அதே சமயம் தன் குடும்பத்தினரிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்காகவும் மியாசாகி அவரது தாத்தாவின் சாம்பலில் சிறிதளவை உட்கொண்டுள்ளார். இதனையடுத்து மியாசாகியின் முதல் பலி, நான்கு வயது சிறுமியான மாரி கொன்னோ. அவளைத் தனது காரில் கடத்தி, டோக்கியோவின் புறநகர்ப் பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அங்கு சென்றதும், அச்சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொன்று, பின்னர் அச்சிறுமியின் உயிரற்ற உடலைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மாரியின் உடற்பாகங்களைப் புகைப்படம் எடுத்த பிறகு, அவன் அவளது ஆடைகளைக் களைந்து, அவற்றைத் தனது குற்றங்களின் ஒரு அருவருப்பான நினைவுச் சின்னமாக வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். இரண்டு நாட்கள் கழித்து, மியாசாகி அச்சிறுமியின் உடலைத் துண்டு துண்டாக வெட்டுவதற்காகக் குற்ற நடந்த இடத்திற்குத் திரும்பியுள்ளார். அது போதாதென்று, வக்கிர குணம் கொண்ட மியாசாகி, துயரத்தில் மூழ்கியிருந்த அந்தச் சிறுமியின் பெற்றோருக்கு ஒரு பார்சலை அனுப்பினார். அந்தப் பெட்டியில் அச்சிறுமின் சாம்பல், பற்கள், அவள் காணாமல் போனபோது அணிந்திருந்த உடையின் புகைப்படம் போன்றவை இருந்தன.
சிறிது நேரத்திற்குப் பிறகு, மியாசாகி ஏழு வயது மசாமி யோஷிசாவாவை அதே இடத்திற்குக் கடத்திச் சென்று, அங்கே மீண்டும் அதே அருவருப்பான செயலை செய்தான். 1988-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், மியாசாகி மீண்டும் தாக்குதல் நடத்தி, இளம் எரிக்கா நம்பாவைக் கடத்திச் சென்று ஒரு வாகன நிறுத்துமிடத்திற்கு இழுத்துச் சென்று அப்பெண்ணைக் கொல்வதற்கு முன் நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்து, அப்பெண்ணின் உடலைப் பொது இடத்தில் வீசிச் சென்றுள்ளார். ஐந்து வயது அயாகோ நோமோட்டோவை தன்னை புகைப்படம் எடுக்க அனுமதிக்குமாறு சம்மதிக்க வைத்த பிறகு, மியாசாகி அச்சிறுமியை கொன்று, உடலைத் தனது குடியிருப்புக்குக் கொண்டு வந்து, இரண்டு நாட்களாக அதை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இறுதியாக அந்த தொடர கொலையாளி பிடிபட்டபோது அவருக்கு 45 வயது. மேலும், துண்டு துண்டாக வெட்டிய அச்சிறுமியின் கைகளை மியாசாகி சாப்பிட்ட சம்பவம் கேட்போரை நடுங்க செய்தது. மியாசாகி, தான் நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஒரு சிறுமியின் தந்தையிடம் 1989-ல் பிடிபட்டபோது, மியாசாகியின் பயங்கர செயல்கள் முடிவுக்கு வந்தது. காவல்துறை அந்தக் கொலையாளியைக் கைது செய்து, அவரது வீட்டைச் சோதனையிட்டபோது, புகைப்படங்களையும் சுமார் 6,000 காணொளிகளையும் கண்டெடுத்ததுனர். காவல்துறையிடம் பிடிபட்டதும், அவர் சட்ட அமலாக்க அதிகாரிகளிடம், "நான் முற்றிலும் தனிமையாக உணர்ந்தேன். மேலும், ஒரு சிறுமி தனியாக விளையாடுவதைப் பார்க்கும்போதெல்லாம், அது கிட்டத்தட்ட என்னையே பார்ப்பது போல இருந்தது," என்று கூறியுள்ளார்.
தனது நீதிமன்ற நடவடிக்கைகள் முழுவதும், மியாசாகி தனது செயல்களுக்கு எந்தப் பொறுப்பையும் ஏற்க மறுத்து, அவற்றை "நற்பண்புச் செயல்கள்" என்று விவரித்தார். மேலும் தனக்கு மனநலக் குறைபாடு இருப்பதாகவும் பாசாங்கு செய்ய முயன்றார். அவரது மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2008 ஜூன் 17 அன்று, தனது 45-வது வயதில், அவர் செய்த கொடூரமான குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.