க்ரைம்

“இரண்டாவது கணவருக்கு செய்த துரோகம்” - பக்கத்துக்கு வீட்டு வாலிபருடன் ஏற்பட்ட தகாத உறவு!

சத்தியசீலன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மீனா கழுத்து அறுக்கப்பட்டு ரத்தம் வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்துள்ளார்..

Mahalakshmi Somasundaram

சென்னையை அடுத்த மேடவாக்கம், விஜயநகர் பூங்கா தெருவில் கூலி வேலை செய்து வருபவர் 38 சத்தியசீலன். இவருக்கும் 40 வயதுடைய மீனாவிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 22 வயதில் ஒரு மகனும் 21 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சத்தியசீலன் மதுவிற்கு அடிமையாகி தொடர்ந்து குடித்து விட்டு வந்து மீனாவை கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் அருண் என்பவருடன் மீனாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சத்தியசீலன் மீனாவை கொடுமைப்படுத்துவதை பயன்படுத்தி கொண்ட அருண் மீனாவிடம் அன்பாக பேசி வந்துள்ளார்.

எனவே மீனாவிற்கு அருண் மீது காதல் ஏற்பட்டு இருவருக்கும் இடையேயான உறவு திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் நெருங்கி பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் மீனாவும் அருணும் நெருங்கி பழகி வந்ததை அறிந்து கொண்ட சத்தியசீலன், மீனாவிடம் அருணுடனான உறவை கைவிடுமாறு கூறியுள்ளார். அதற்கு மீனா மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது பின்னர் சத்தியசீலன் இப்போது வசிக்கும் வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீட்டிற்கு சென்று நன்றாக வாழலாம் என கூறியுள்ளார்.

இருப்பினும் கணவன் சத்தியசீலன் கூறியதை சிறிதும் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் பக்கத்து வீட்டு நபரான அருணுடன் மீனா பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலை முடிந்து மாலை வீடு திரும்பிய சத்தியசீலன் சற்று அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. மது போதையில் இருந்த சத்தியசீலன் அவரது மனைவி மீனா இருவருக்கும் வீட்டில் கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கணவன் சத்தியசீலன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மீனா கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். மீனாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சத்தியசீலன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மீனா கழுத்து அறுக்கப்பட்டு ரத்தம் வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்துள்ளார். மேலும் சத்தியசீலன் கையில் கத்தியை பார்த்து கணவர் மனைவியை கொலை செய்தது தெரியவந்துள்ளது எனவே அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசில் தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து அருகில் உள்ள மேடவாக்கம் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கொலை செய்யப்பட்டிருந்த மீனாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சத்தியசீலனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் மீனாவுக்கு ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமாகி, கணவர் இறந்த நிலையில், சத்தியசீலனை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்தது தெரியவந்தது. எனவே மீண்டும் பக்கத்து வீட்டு வாலிபருடன் அடிக்கடி செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்து மனைவியை கொலை செய்ததாக சத்தியசீலன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் சத்தியசீலன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.