தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: திமுக தொடர்ந்து இரண்டாவது வரலாற்று வெற்றியை பெறத் தயாராக உள்ளதா?... கணிப்புகள் சொல்வது என்ன?

நிர்வாக அமைப்புகளுடன் நிலையான தொடர்பு இல்லாத ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால், கொள்கை முடிவுகள் நின்று போகும்...

மாலை முரசு செய்தி குழு

ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது, அதன்பின்பு மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் நிலையில், தமிழ்நாடு தற்போது இந்த தேர்தலில் மும்முனை பெட்டிக்குள் செல்லவிருக்கிறது. தவெக கட்சியின் நட்சத்திர நடிகருக்கு கூடும் பிரச்சார கூட்டங்களின் சத்தமும், NDA கூட்டணியின் அவசர கூட்டணி முயற்சிகளும் தற்போது அதிக கவனத்தை பெற்றாலும், தேர்தல் நிலைமையின் அடிப்படை அரசியல் காரணிகளை பார்க்கும்போது அதன் நிலை சரியாக உள்ளது எனலாம். அது என்னவென்றால், ஸ்டாலின் தலைமையிலான திமுக வழிநடத்தும் 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி' (SPA) மீண்டும் தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சி பொறுப்பில் அமரும் பாதையில் உள்ளது.

1971க்கு பிறகு எந்த திராவிட கட்சியும் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரவில்லை. எனவே இது ஒரு வரலாற்று சாதனையாக இருக்கக்கூடும்.

வேட்பாளர் தேர்வு மற்றும் கூட்டணி வலிமை:

திமுக ஏற்கனவே 21 கட்சிகள் கொண்ட மிகப்பெரிய வலிமையான கூட்டணியை உருவாக்கியுள்ளது.இந்த கூட்டணியில் முக்கியமான காட்சிகளாக, காங்கிரஸ் (28 தொகுதிகள்), விசிக, இந்திய முஸ்லீம் லீக் ,இடதுசாரி கட்சிகள் மற்றும் மறைந்த விஜயகாந்தின் தேமுதிக கட்சிகள் போன்றவை அடங்கும். வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதால் பல தற்போதைய எம்எல்ஏக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது திராவிட அரசியல் கூட்டணி கணக்கின் மிகசிறந்த உதாரணம் என்று கூறப்படுகிறது. இந்த ஒவ்வொரு சிறிய கூட்டணி கட்சியும் குறிப்பிட்ட சமூக அல்லது சாதி வாக்குகளை கொண்டிருக்கிறது. அவை ஒன்றாக சேரும்போது, தனித்தனியாக இருக்கும் வாக்குகளின் கூட்டுத்தொகையை விட அதிகமான அரசியல் பலத்தை உருவாக்குகின்றன. இதற்கு மாறாக அதிமுக தலைமையிலான NDA கூட்டணி இன்னும் கட்சியின் உட்பிரச்சனைகளோடு போராடிக் கொண்டிருக்கிறது. பாஜ கவிற்கு தமிழ்நாட்டில் வலுவான ஆதரவு என்பது இல்லை. தவெக எந்த கூட்டணியும் இல்லாமல் தனியாக தேர்தலை சந்திக்கிறது.

வாக்குச்சாவடி நிலை மற்றும் கட்சி பணியாளர்கள்:

திமுகவின் உண்மையான வலிமை வாக்குச்சாவடி அமைப்பில்தான் இருக்கிறது. அதாவது, ஒவ்வொரு பஞ்சாயத்திலும் கிராம அளவிலான கட்சி அமைப்புகள், இளைஞர் அணி மன்றம், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் செயல்படும் இளைஞர் இயக்கம். மேலும், இவற்றுடன் ஆயிரக்கணக்கான செயலில் இருக்கும் கட்சி பணியாளர்கள் தேர்தல் நாளை ஒரு முக்கியமான நாளாக அதாவது, முக்கிய போர்நாளாக கருதி செயல்படுகிறார்கள். இதுமட்டுமின்றி வாக்குச்சாவடி முகவர்கள், வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் தெரு அளவிலான மக்கள் இயக்கம் அனைத்தும் ஏற்கனவே சிறந்த செயல்பாட்டில் உள்ளன.

மேலும், தவெக ரசிகர் அமைப்புகளின் உற்சாகம் இருக்கலாம். அவர்களது ஆவணங்களில் 6.5 லட்சம் பதவியாளர்கள் இருப்பதாக கூறப்படலாம். ஆனால் ரசிகர்களை ஒழுங்குபடுத்தப்பட்ட, ஒரு தேர்தல் பணியாளர்களாக மாற்ற தவெகவிற்கு பல ஆண்டுகள் ஆகும். இந்த திறனைதான் திராவிட கட்சிகள் பல தசாப்தங்களாக உருவாக்கி தங்களுக்கு பலமாக வைத்துள்ளன. ஆனால், NDA கூட்டணியின் கட்சி பணியாளர்கள் பல தோல்விகளுக்குப் பிறகு மன உறுதியினை இழந்து இருக்கிறார்கள்.

திராவிட இயக்கத்தின் பாரம்பரியம்:

தமிழ்நாடு அரசியலின் மையத்தில், நூற்றாண்டு பழமையான திராவிட சிந்தனை இன்னும் உள்ளது.

அதன் முக்கியக் காரணங்களாக கூறுவது, சமூக நீதி, கூட்டாட்சி, தமிழ் பெருமை, சுயமரியாதை,

வட இந்திய ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு ஆகியவையே ஆகும். திமுக இந்த அரசியல் சிந்தனையின் முக்கியமானவர்களாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. பாஜகவின் மைய அரசியல் அணுகுமுறைக்கு எதிராக இந்த திராவிட கட்சியின் கருத்து இருப்பதாக என்று கூறப்படுகிறது. கடைசி 60 ஆண்டுகளில் 58 ஆண்டுகள் திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்துள்ளன. தமிழ் அடையாளம் ஆபத்திற்கு உள்ளதாக வாக்காளர்கள் உணரும்போது, அவர்கள் இயல்பாக திராவிட அரசியல் குடும்பத்திற்கே திரும்புகிறார்கள். இந்த அடிப்படை அரசியல் ஆதரவு திமுகவிற்கு ஒரு நிரந்தர வாக்கு அடித்தளத்தை வழங்குகிறது.

கட்சி பேச்சாளர்களின் ஊடக ஆதிக்கம்:

திமுக ஊடக அரசியலில் மிகவும் திறம்பட செயல்பட்டுவருகிறது.

திமுக கட்சியின் உள்ளவர்கள், தொலைக்காட்சி விவாதங்களிலும், சமூக ஊடக பிரச்சாரங்களிலும், இளைஞர்களை அணுகும் முயற்சிகளிலும் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள். கட்சியின் பேச்சாளர்கள் முக்கியமான முதன்மை நேர (prime-time) நிகழ்ச்சிகளில் தங்களது ஆதிக்கத்தை செலுத்துகிறார்கள். அவர்கள் உடனடியாக எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கிறார்கள். இதன் மூலம் திராவிட மடல் அரசு (Dravidian Model of Governance) என்ற அரசியல் கருத்தை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். இன்றைய காலத்தில் அரசியல் கருத்துப் போர்கள் தொலைக்காட்சிகளிலும், ஸ்மார்ட்போன்களிலும்தான் நடைபெறுகின்றன. அந்தநிலையில் திமுக அதில் முன்னிலை வகிக்கிறது. தவெக சில நேரங்களில் சமூக ஊடகங்களில் வைரலாகலாம். NDA பல சமயங்களில் எதிர்வினை அளிக்கும் நிலைக்கு மட்டுமே தள்ளப்பட்டுவருகிறது.

கல்வியறிவு பெற்ற சமூகம்:

தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதம் இந்தியாவிலேயே உயர்வாக உள்ளது (சுமார் 82–85%). இதில், நகர்ப்புற அல்லது புறநகர்ப்புறங்களில் உள்ள கல்வியறிவு பெற்ற நடுத்தர வர்க்கம் (மொத்த வாக்காளர்களில் சுமார் 35–40%) தேர்தலை தீர்மானிப்பதில் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கின்றனர். இந்த “சிந்தித்து வாக்களிக்கும் வாக்காளர்கள்”, அனுபவம் பெற்ற தொழில்முறை நிபுணர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் தகவல் அறிந்த பெண்கள் போன்றோர் அடங்குவர். இவர்கள் வெறும் அரசியல் பரபரப்புகளையோ அல்லது பிரபலங்களின் தாக்கத்தையோ மட்டும் பின்பற்றுபவர்கள் அல்ல.

சமீபத்திய கருத்துக் கணிப்புகள் சொல்வது என்னவென்றால், அவர்கள் ஆட்சிக்கு எதிரான வெறும் அரசியல் பேச்சுக்களை விட உண்மையாக கிடைக்கும் நலத்திட்டங்களையே முக்கியமான ஒன்றாக கருதுகிறார்கள்.

அதாவது, பெண்களுக்கான மாதாந்திர பண உதவி, இலவச லேப்டாப் திட்டம், விவசாயிகளுக்கான திட்டங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள் போன்ற நலத்திட்டங்களுக்கே அவர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

ஜென் Z வாக்காளர்கள் (சுமார் 19% வாக்காளர்கள்) தவெக கட்சியின் கூட்டங்களில் அவர்கள் உற்சாகமாக பங்கேற்கலாம். ஆனால் கல்வியறிவு பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த பெரும்பாலான வாக்காளர்கள் இறுதியில் ஆட்சியின் செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை பார்த்துதான் வாக்களிப்பார்கள். இந்த இரண்டு அம்சங்களிலும் திமுக தலைமையிலான அரசு இன்னும் நல்ல மதிப்பெண்களையே பெறுகிறது.

நிறுவனங்கள், தொழில் துறை மற்றும் கார்ப்பரேட்களின் நம்பிக்கை:

இன்றைய உலகம் மிகவும் நிலைகுலைந்த சூழ்நிலையைக் கொண்டுள்ளது. உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் நடைபெறும் போர்கள், விநியோகச் சங்கிலி தடைகள், எரிசக்தி விலை உயர்வுகள், ரூபாயின் மதிப்பு மாற்றங்கள் மற்றும் இந்தியாவின் சொந்த பொருளாதார அழுத்தங்கள் போன்ற காரணிகளால் உலக பொருளாதாரம் பதற்றமான நிலையிலேயே உள்ளது.

இந்த சூழ்நிலையில் நிறுவனங்கள், தொழில் அமைப்புகள் மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் நிலைத்தன்மை மற்றும் நிர்வாகத் தொடர்ச்சியை மிகவும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.

திமுக தலைமையிலான அரசின் நிர்வாக அனுபவமும் அதன் செயல்திறனும் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. தொடர்ந்து ஒரே மாதிரியான தொழில் கொள்கைகள், செமிகண்டக்டர் மற்றும் மின்சார வாகன (EV) முதலீடுகள், தொழில் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தங்கள் மற்றும் திட்டங்களை சீராக செயல்படுத்தும் திறன் ஆகியவை மாநிலத்திற்கு ஒரு நம்பகமான ஆதாரமாக பார்க்கப்படுகின்றன.

மாறாக, தவெகவின் தனது நட்சத்திர ஆதரவும் இளைஞர்களிடையே தொடர்பில் இருந்தாலும், நிர்வாகம் மற்றும் ஆட்சி அனுபவத்தில் முற்றிலும் அனுபவம் இல்லாத ஒன்றாக கருதப்படுகிறது.

சட்டமன்ற அனுபவம் இல்லாத, கொள்கை வடிவமைப்பில் முன்னர் ஆழமான அனுபவம் இல்லாத மற்றும் நிர்வாக அமைப்புகளுடன் நிலையான தொடர்பு இல்லாத ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால், கொள்கை முடிவுகள் நின்று போகும் அபாயம், அனுமதி வழங்கும் செயல்முறைகள் தாமதமாகும் நிலை மற்றும் முதலீட்டாளர்களுக்கு உறுதியற்ற சூழ்நிலை உருவாகும் அபாயம் உள்ளது என கருதுகிறார்கள்.

இவ்வளவு அதிக அபாயம் நிறைந்த உலக மற்றும் தேசிய சூழ்நிலையில், அனுபவம் இல்லாத தவெக அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சி இயந்திரத்தை மறைமுகமாக பாதிக்கக்கூடும் என்று தொழில் துறை தலைவர்கள் அச்சப்படுகின்றனர். இதனால் முதலீடுகள் குறையலாம், பெரிய திட்டங்கள் தாமதமாகலாம் மற்றும் மாநில வளர்ச்சி மெதுவாகலாம். அதனால், மாநிலத்தின் பொருளாதார பங்குதாரர்கள் மற்றும் சிந்தித்து வாக்களிக்கும் வாக்காளர்களிடையே திமுகவின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.

மத்திய அரசின் உளவுத்துறை மதிப்பீடு மற்றும் யூனியன் பட்ஜெட்டின் சிக்னல்கள்:

இந்திய அரசியலில் பொதுவாக அறியப்பட்ட ஒரு விஷயம் என்னவென்றால், தேர்தல் நடைபெறும் நாளுக்கு முன்பே மத்திய அரசு தனது உளவுத்துறை அமைப்புகளின் மூலம் தேர்தல் சூழ்நிலையை கவனமாக கண்காணித்து வருகிறது. இவ்வாறு நேரடியாக கிடைக்கும் மதிப்பீடுகள் தேசிய அரசியல் திட்டங்கள் மற்றும் வளங்களின் ஒதுக்கீட்டை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2026 யூனியன் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான எந்த சிறப்பு நிதி திட்டங்களும், பெரிய கட்டமைப்புகளின் அறிவிப்புகளும் மற்றும் மாநிலத்திற்கே உரிய முக்கிய ஒதுக்கீடுகளும் இல்லாதது அரசியல் வட்டாரங்களில் ஒரு வலுவான சிக்னலாக பார்க்கப்படுகிறது.

அதாவது, மத்திய அரசின் தலைமை ஏற்கனவே திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு திரும்பும் என்று முடிவு செய்திருக்கலாம் என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது.தற்போது நிலைமையில் NDA கூட்டணிக்கான வலுவான அரசியல் நிலை தென்படவில்லை. அதனால் திமுக ஆட்சியில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் இருந்து வரும் இந்த அமைதியான ஆனால் தெளிவான சிக்னல் என்பது, ஸ்டாலின் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக வருவதற்கான வாய்ப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

நலத்திட்டங்களின் செயல்பாடு மற்றும் தேர்தல் நிலைத்தன்மை என்ன?:

புதிய நலத்திட்டங்கள், அடிப்படை கட்டமைப்புகளின் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் “திராவிட மாடல்” என்ற அரசியல் கருத்து தொடர்ந்து மக்களிடம் நல்ல வரவேற்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சில சுயாதீன கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணிக்கு 41% க்கும் அதிகமான வாக்கு சதவீதம் கிடைக்கலாம் என்றும், அதனால் அவர்களுக்கு அதிகப்படியான தொகுதி முன்னிலை கிடைக்கும் என்றும் கணிக்கின்றன.

கருத்துக் கணிப்புகள் மிகவும் கடுமையாக இருந்தாலும் கூட, மும்முனை போட்டி ஏற்படுவதால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிளவுபட்டு திமுகவிற்கு சாதகமான ஒரு சூழ்நிலையாக உருவாகிறது.

NDA ஏன் தோல்வியடையலாம்? TVK பற்றிய பெரும் எதிர்பார்ப்பு ஏன் நிஜமாகாது?:

மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் செய்யப்பட்ட சமீபத்திய கண்காணிப்புகள், NDA கூட்டணிக்குள் உள்ள உட்கட்சி பிளவுகளை வெளிப்படையாக காண்பிக்கின்றன. முன்பு ஜெயலலிதாவுடன் இணைந்து பாஜகவிற்கு வலுவாக எதிர்ப்பு தெரிவித்திருந்த பல தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள், தற்போது அதிமுக-பாஜக கூட்டணியின் காரணமாக அதிருப்தியடைந்துள்ளனர். மேலும், கூட்டணிக்குள் ஆழமான முரண்பாடுகள் இருப்பதையும் காட்டுகிறது மற்றும் அந்த கட்சியை உள்ளிருந்து பலவீனப்படுத்துகிறது. அதிமுக-NDA கூட்டணியானது உறுதியான அரசியல் நம்பிக்கையின் அடிப்படையில் உருவான ஒன்று அல்ல என்றும், மாறாக மத்திய அமைப்புகளின் அழுத்தத்தால் கட்டாயமாக உருவாக்கப்பட்ட கூட்டணியாக பார்க்கப்படுகிறது. இதனால் அந்த கூட்டணிக்கு தமிழ்நாட்டில் வலுவான அரசியல் நம்பகத்தன்மையும் ஆழமான கட்சி பணியாளர் அமைப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.

தவெகவில் இளைஞர்களிடையே பெரிய ஆதரவும் சமூக ஊடகங்களில் அதிக கவனமும் பெற்றிருந்தாலும், தேர்தலில் அது மூன்றாவது இடத்தில் முடியும் என்று கணிக்கப்படுகிறது. அதற்கு சுமார் 13–15% வாக்கு சதவீதமும், அதிகபட்சம் 6 முதல் 15 தொகுதிகளும் கிடைக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

கூட்டணி கட்சிகள் இல்லாமலும், வாக்குச்சாவடி அளவில் வலுவான கட்சி அமைப்பு இல்லாமலும் இருப்பதால், நகர்ப்புற இளைஞர்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவை கிராமப்புற மற்றும் புறநகர் தொகுதிகளாக மாற்றுவது கடினமாக இருக்கும். ஆனால் இந்த ஆதரவு, எதிர் ஆட்சிக் குரல்களை பிளவுபடுத்தும். இதனால் திமுகவிற்கு பாதிப்பு ஏற்படுவதற்குப் பதிலாக, அது திமுகவிற்கு கூடுதலாக நன்மை பயக்கும் எனவும் கூறப்படுகிறது.

மூலோபாய அடிப்படை முடிவு:

தமிழ்நாடு பொதுவாகவே தற்போது ஆளும் ஆட்சிக்கு தொடர்ச்சியான இரண்டாவது ஆட்சிக்காலத்தை வழங்கும் பழக்கம் அதிகமாக இல்லாத மாநிலமாக இருந்தாலும், இம்முறை நிலைமை வேறுபட்டதாக இருக்கலாம். ஒப்பிட முடியாத அளவிலான கூட்டணி கணக்கு, போராட்ட அனுபவம் கொண்ட வாக்குச்சாவடி நிலை கட்சி பணியாளர்கள், ஆழமான திராவிட அரசியல் வேர்கள், ஊடகங்களில் தெளிவான மற்றும் வலுவான கருத்து வெளிப்பாடு, மேலும் கல்வியறிவு பெற்ற சிந்தித்து வாக்களிக்கும் வாக்காளர்கள் நலத்திட்டங்களின் நிலைத்தன்மையை விரும்புவது போன்ற காரணிகள் அனைத்தும் சேர்ந்து பார்க்கும்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது மிகவும் சாத்தியமான முடிவாகத் தெரிகிறது.

ஏப்ரல் மாத தேர்தலில் முடிவை தீர்மானிக்கும் இறுதி 10–15 தொங்கு தொகுதிகள் மட்டும் நிலைமையை உறுதிப்படுத்தும். ஆனால், அரசியல் சூழ்நிலைகள் ஏற்கனவே எந்த திசையில் செல்கின்றன என்பதை தெளிவாக காட்டுகின்றன. திராவிட மாடல் அரசியல் வெறும் உயிருடன் இருப்பதல்ல, அது 2026ஆம் ஆண்டில் புதிய வரலாற்றை எழுதத் தயாராக உள்ளது. இந்த பகுப்பாய்வு சமீபத்திய கருத்துக் கணிப்புகள், கட்சி அமைப்புகளின் கருத்துகள் மற்றும் களத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு சுயாதீன மதிப்பீடு ஆகும்.

“திராவிட மாடல் வெறும் தொடர்ச்சியாக இருப்பதல்ல; 2026ல் அது புதிய வரலாற்றை உருவாக்கத் தயாராக உள்ளது — இந்த அதிர்ச்சியான காலகட்டத்தில் நிர்வாகத்தில் புதிய பரிசோதனைகளை செய்ய முடியாது என்று நம்பும் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் உலகத்தின் அமைதியான நம்பிக்கையால் அது உறுதிப்படுத்தப்படுகிறது" என்றும் கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.