Vijay Road Show Permission Denied in Puducherry 
தமிழ்நாடு

“விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி மறுப்பு” - கரூர் சம்பவத்தை காரணம் காட்டி தவெக-வின் கோரிக்கையை நிராகரித்த புதுச்சேரி காவல்துறை!

மக்களுக்கு வசதியான இடங்களில் மட்டும் தான் தவெக-வின் மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடைபெறும் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தது

Mahalakshmi Somasundaram

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சென்று பிரச்சார கூட்டம் நடத்த திட்டமிட்டு மூன்று மாவட்டங்களில் வெற்றிகரமாக பேசி முடித்த நிலையில் கரூரில் நடந்த கூட்டத்தின் போது அதிக கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த நிலையில் தவெக மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில் இதற்கு முழு பொறுப்பையும் தமிழக வெற்றி கழகம் தான் ஏற்கவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் தவெக- வினர் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் அப்போது உச்சநீதிமன்ற இதற்கு தமிழக வெற்றி கழகத்தை மட்டும் குற்றம் சாட்டுவது சரியானது இல்லை என கூறி தீர்ப்பளித்தது மேலும் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்கு கண்டனமும் தெரிவித்தது.

இதற்கிடையில் விஜய் இறந்தவர்களின் குடும்பங்களை சந்திக்கவில்லை அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வில்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் கரூர் துயர சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பிறகு வீடியோ வெளியிட்டு தனது வருத்தத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண தொகையையும் அறிவித்த விஜய் விரைவில் கரூர் வருவதாகவும் தெரிவித்திருந்தார். பின்னர் சில சட்ட சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு கருதி இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தவெக சார்பில் சென்னை அழைத்துவரப்பட்டு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் வைத்து விஜய் அவர்களை சந்தித்து தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இனி மேடைகள் அமைத்து ஒரு அரங்கத்திலோ அல்லது மக்களுக்கு வசதியான இடங்களில் மட்டும் தான் தவெக-வின் மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடைபெறும் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தது. அதனை தொடர்ந்து கடந்த (நவ 23) ஆம் தேதி விஜய் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உள் அரங்க கூட்டமாக மக்களை சந்தித்து உரையாற்றியிருந்தார். இதனை தொடர்ந்து வருகிற (டிச 05) ஆம் தேதி புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டு கடந்த (நவ 26) தேதி டிஜிபி அலுவலகத்தி கடிதம் வழங்கப்பட்டது.

ரோடு ஷோவிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் நேற்று வரை காவல்துறை சார்பில் எந்த தகவலும் சொல்லப்படாத நிலையில் நேற்று டிஜிபி அலுவலகத்தில் டிஜிபியை சந்தித்த தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் இது குறித்து ஆலோசனை செய்ததாக சொல்லப்படும் நிலையில் புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்த கரூர் சம்பவத்தை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, அதற்கு மாறாக தனியாக மைதானம் போன்ற இடங்களில் கூட்டம் நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.