"சொல்றத கேக்கலனா போட்டோவ லீக் பண்ணிருவேன்" சிறுமியை கட்டிப்போட்டு சீரழித்த 27 வயது நபர்! பணத்திற்காக விபச்சாரத்தில் தள்ளி சித்திரவதை

சிறுமிக்கு எதிராகப் பலமுறை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் செயல்களைச் செய்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
child sexual exploitation
child sexual exploitation
Published on
Updated on
2 min read

13 வயது சிறுமியை கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, விபச்சாரத்திற்குத் தள்ளிய நபருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

27 வயதான அந்த நபருக்கு, ஜூலை 6, திங்கட்கிழமை அன்று சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டது. பதின்மவயது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஃபூங் யோங் மீது மொத்தம் 20 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், ஃபூங் யோங் பாதிக்கப்பட்ட சிறுமியை ஒரு படிக்கட்டுத் தளத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதுடன், எரியும் சிகரெட்டால் அவரது இரண்டு முறை சூடு போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தோலில் தீக்காயத் தழும்புகள் இருந்தன என நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது. மே 2023 முதல் ஜூலை 2023 வரையிலான காலகட்டத்தில், யோங் ஏழு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அந்த சிறுமிக்கு எதிராகப் பலமுறை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் செயல்களைச் செய்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பண சம்பாதிக்க வேண்டி ஒரு சிறுமியின் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தனது வன்முறை மற்றும் பாலியல் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள சுரண்டிய ஒரு 'பாலியல் வேட்டையாடி' என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் யோங் பற்றி நீதிமன்றத்தில் விவரித்துள்ளனர்.

இதனையடுத்து, சட்டரீதியான பாலியல் வன்புணர்வு தொடர்பான ஆறு குற்றச்சாட்டுகளை யோங் ஒப்புக்கொண்டார்; தண்டனை வழங்கும் போது, ​​பல்வேறு பாலியல் குற்றங்கள் தொடர்பான கூடுதல் 14 குற்றச்சாட்டுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக கூறபடுகிறது. இந்த சம்பவமானது 2023, மே 19 அன்று, யோங் ஒரு ஆன்லைன் வீடியோ கான்பரன்சிங் தளம் மூலம் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் தொடர்பு கொண்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், சிறுமியின் வயதை அறிந்திருந்தபோதிலும், அவர் அந்த சிறுமியிடம் பாலியல் உறவு கொள்ள விரும்பி சிறுமியிடம் கேட்டுள்ளார். அதை அந்த சிறுமியும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

தனது இல்லத்தில், யோங் சிறுமியை கைவிலங்கிட்டுக் கட்டிப்போட்டு, சிறுமி மீது ஒரு பாலியல் விளையாட்டுப் பொருளைப் பயன்படுத்தியதோடு, பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதற்கு முன்பு பலமுறை அடித்துள்ளார். அடுத்த நாள், யோங் ஒரு படிக்கட்டில் சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய பின்னர், சிறுமியின் கழுத்தை நெரித்துள்ளார். இதனால் சிறுமி தலைசுற்றி, நிற்கவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

பின்னர் அவ்விருவரும் யோங் இல்லத்திற்கு சென்றுள்ளனர், அங்கு மேலும் பாலியல் செயல்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.மேலும், அதே நாளில் யோங், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் சுமார் 200 முதல் 300 டாலர் வரை கடன் வழங்குமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும், மற்ற ஆண்களுடன் பணம் பெற்றுக்கொண்டு பாலியல் செயல்களில் ஈடுபடுமாறு சிறுமியிடம் கூறியதோடு, இதற்கு இணங்க மறுத்தால் "நஷ்டத்தை சந்திக்க நேரிடும்" என்றும் எச்சரித்துள்ளார். யோங்-கிற்காக பாலியல் சேவைகளை வழங்க அந்த சிறுமி ஒப்புக்கொண்டவுடன், வாடிக்கையாளர்களிடம் என்ன கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை விவரிக்கும் ஒரு விலைப் பட்டியலை யோங் சிறுமியிடம் வழங்கியுள்ளார்.

பின்னர் அவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் டெலிகிராம் பயனர்பெயரையும் பாலியல் சேவைகளையும் இரண்டு ஆன்லைன் தளங்களில் விளம்பரப்படுத்தி, இறுதியில் அவர் சம்பாதித்த பணத்திலிருந்து சுமார் 3,000 டாலர்களை அபகரித்துள்ளார்.

மேலும் யோங், ஜூன் 5, 2023-க்குச் சற்று முன்பு சிறுமியின் விவரங்களை விளம்பரப்படுத்துவதை நிறுத்தியுள்ளார். ஆனாலும் பாலியல் உறவுக்காக யோங் அந்த சிறுமியை தொடர்ந்து சந்தித்து வந்துள்ளார். மேலும், ஜூன் 1 முதல் ஜூன் 5, 2023 வரை, அந்த சிறுமி 5,000 டாலர் கொடுக்காவிட்டால், சிறுமியின் அந்தரங்கப் புகைப்படங்களையும் காணொளிகளையும் இணையத்தில் கசியவிடுவதாக அவர் மிரட்டியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவரது இந்த குற்றங்களுக்காக அவருக்கு தண்டனையளிக்கப்ட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com