சமூக வலைத்தளத்தில் தற்போயது ஒரு வீடியோ தீயாக பறவையோ வருகிறது. அதில், பெங்களூருவில் ஒரு பெண், டெலிவரி ஊழியரை வீட்டிற்குள் அனுமதிக்க பலமுறை மறுத்த போதிலும், டெலிவரி ஏஜென்ட் ஒருவர் அவரது வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, பின்னர் நிர்வாணமாகத் தோன்றியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவில், பார்சல் வழங்க வந்த டெலிவரி ஊழியர் "தனது கழிப்பறையைப் பயன்படுத்தலாமா?" என்று கேட்டதாக அப்பெண் கூறியுள்ளார். தான் பலமுறை அவரது கோரிக்கையை மறுத்ததாகவும், ஆனால் அவர் தனது அனுமதியின்றி வீட்டிற்குள் நுழைந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதன் பின்பு, கழிவறையிலிருந்து வெளியே வந்த அந்த டெலிவரி ஊழியர், தன்னிடம் நிர்வாணமாகத் தோன்றியதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். "அவர் குளியலறையிலிருந்து வெளியே வந்தபோது, எனக்கு முன்பாகத் தன் ஆடையைக் களைந்து நிர்வாணமாகத் தோன்றினார். நான் அதிர்ச்சியடைந்தேன், என் உரிமை மீறப்பட்டது போல உணர்ந்தேன், அவமானப்படுத்தப்பட்டேன், மேலும் என் சொந்த வீட்டிலேயே முற்றிலும் பாதுகாப்பற்றதாக உணர்ந்தேன்," என்று அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் எழுதியிருந்தார்.
"தனது வீட்டிற்குள் அந்நியர்களை அனுமதிப்பதில்லை" என்பதைத் தெளிவுபடுத்திவிட்டதாகவும், அதற்குப் பதிலாக அண்டை வீட்டாரிடம் உதவி கேட்குமாறு அவருக்குப் பரிந்துரைத்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். "நான் பலமுறை மறுத்தபோதிலும், அவர் தனது செருப்புகளைக் கழற்றிவிட்டு, என் அனுமதியின்றி என் வீட்டிற்குள் நுழைந்தார்," என்று அவர் தெரிவித்துள்ளார். ஒரு சாதாரண மறுப்புடன் இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 'முடியாது' என்பதோடு அந்த உரையாடல் முடிந்திருக்க வேண்டும். ஒருவரின் எல்லைகளைப் புறக்கணிக்கவோ அல்லது அனுமதியின்றி அவர்களின் வீட்டிற்குள் நுழையவோ யாருக்கும் உரிமை இல்லை," என்று அவர் எழுதியிருந்தார்.
சம்பவம் குறித்து விவரித்த அப்பெண், சம்பவம் நடந்த நேரம் முழுவதும் தனது பாதுகாப்பு குறித்து அச்சமாக இருந்ததாகக் தெரிவித்துள்ளார். "நான் மிகவும் பயந்துபோனேன். என் கைபேசி கேமராவை இயக்கி, முன் கதவைத் திறந்து வைத்து, நுழைவாயிலுக்கு அருகில் நின்றேன். ஏனென்றால், ஏதாவது அசம்பவம் நடந்தால், நான் வெளியே ஓடிச் சென்று உதவிக்கு அழைக்கலாம் என்று பயந்தேன்" என்று அவர் அச்சத்தில் கூறினார். தற்போது, தனது சொந்த வீட்டிலேயே பாதுகாப்பற்றதாக உணர்வதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்