வேலைக்கு ஆகாத வாரிசு..! "பெற்றோரைக் கொன்று ரம்பத்தால் அறுத்து.." ஆற்றில் வீசிய பொறியாளர்...!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இஸ்லாமியப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்...
crime
crime
Published on
Updated on
2 min read

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் பகுதியில் அறுபது வயதைக் கடந்த முதிய தம்பதியினர் காணாமல் போனது குறித்துக் காவல்துறைக்கு ஒரு புகார் வந்தது. அந்தப் புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஒரு தந்தையின் பிடிவாதமும் மகனின் ஆத்திரமும் எப்படி ஒரு மிகப்பெரிய துயரத்தில் முடிந்தது என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தியாம் பகதூர் மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகிய இருவரையும், அவர்களின் சொந்த மகனான அம்பேஷ் என்ற பொறியாளர் அடித்துக் கொன்று, பின்னர் உடல்களை ரம்பத்தால் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியது தெரியவந்துள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பின்னால் ஒரு மதமாற்றுத் திருமணப் பிரச்சினை இருந்துள்ளது. பொறியாளரான அம்பேஷ், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இஸ்லாமியப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், ரயில்வேயில் பணியாற்றி ஓய்வுபெற்ற அவரது தந்தை ஷியாம் பகதூர், அந்தப் பெண்ணைத் தனது மருமகளாக ஏற்றுக்கொள்ள முற்றிலும் மறுத்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தும், அந்தப் பெண்ணை வீட்டிற்குள் அனுமதிக்க அவர் கடைசி வரை சம்மதிக்கவில்லை. இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நீண்ட நாட்களாகக் கசப்பான சூழல் நிலவி வந்துள்ளது.

தொடர்ச்சியான குடும்ப அழுத்தத்தால் அம்பேஷ் தனது மனைவியைப் பிரிய முடிவெடுத்தார். இதற்காகத் தனது மனைவியிடம் பேசியபோது, அவர் விவாகரத்துப் பணமாக ஐந்து லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். இந்தத் தொகையைத் தருமாறு தனது தந்தையிடம் கடந்த டிசம்பர் எட்டாம் தேதி அம்பேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அதற்கு அவர் தந்தை பிடிவாதமாக மறுத்த நிலையில், அங்கு கடும் வாக்குவாதம் வெடித்தது. ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அம்பேஷ், அங்கிருந்த கனமான அம்மிக்கல்லை எடுத்துத் தனது தாய் பாபிதாவைத் தாக்கினார். அவர் அலறுவதைக் கண்டு உதவிக்கு ஓடி வந்த தந்தை ஷியாம் பகதூரையும் அம்பேஷ் சரமாரியாகத் தாக்கினார். இதில் அந்த முதிய தம்பதியினர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

பெற்றோரைக் கொன்ற பிறகு அந்தத் தடயங்களை மறைக்க அம்பேஷ் மிகவும் திட்டமிட்டுச் செயல்பட்டார். உடல்களை அப்புறப்படுத்த பெரிய பைகள் கிடைக்காததால், வீட்டில் இருந்த ரம்பத்தை எடுத்துத் தனது பெற்றோர் இருவரின் உடல்களையும் ஆறு துண்டுகளாகச் சிதைத்தார். பின்னர் அந்தத் துண்டுகளைச் சிறிய சாக்கு மூட்டைகளில் கட்டி, தனது மகிழுந்தின் பின்பகுதியில் வைத்து அதிகாலை வேளையில் ஆற்றில் வீசியுள்ளார். அதன் பிறகு தனது சகோதரி வந்தனாவுக்குத் தொலைபேசியில் அழைத்து, "பெற்றோர் கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டனர், நான் அவர்களைத் தேடிச் செல்கிறேன்" என்று கூறிவிட்டுத் தனது கைபேசியை அணைத்து வைத்துள்ளார்.

அம்பேஷின் நடத்தையில் சந்தேகமடைந்த அவரது சகோதரி காவல்துறையில் புகார் அளித்தார். தலைமறைவாக இருந்த அம்பேஷைச் சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு காவல்துறையினர் பிடித்து விசாரித்தபோது, அவர் முதலில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினாலும், பின்னர் தனது கொடூரக் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது ஆற்றில் வீசப்பட்ட உடல் பாகங்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அம்மிக்கல்லையும் கொலைக்குப் பயன்படுத்திய ரம்பத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com