

கர்நாடக மாநிலம், பெங்களூரு திலக் நகரை சேர்ந்தவர் 35 வயதான சல்மா. இவருக்கு கடந்த சிலவருடங்களுக்கு முன்பு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த வருடம் அவரது கணவர் உயிரிழந்த நிலையில் சல்மா தனது நான்கு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சல்மாவின் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்ட சுப்பிரமணி அதனை காரணமாக வைத்து நெருங்கி பழக தொடங்கியுள்ளார்.
அவ்வப்போது சல்மாவுக்கு தேவையான பண உதவிகளை செய்து வந்துள்ளார். நாளடைவில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியதாக சொல்லப்படுகிறது. இதனை தெடர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பது குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு வெளியில் செல்வது என தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சுப்ரமணி தனிமையில் சந்திக்க வேண்டும் என சல்மாவை அழைத்துள்ளார்.
எனவே சல்மாவும் சுப்பிரமணி அவரது வீடிற்கு அருகில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி சல்மாவை அருகில் இருந்த கட்டையால் தாக்கினர். இதனால் பலத்த காயமடைந்த சல்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், சல்மா உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி சல்மாவின் உடலை போர்வையில் சுற்றி அருகில் இருந்த ஆட்டோவில் போட்டு விட்டு தப்பித்து சென்றுள்ளார்.
காலை ஆட்டோவை எடுக்க வந்த ஆட்டோ ஓட்டுநர் போர்வையில் இருந்த சல்மாவின் உடலை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சல்மாவை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து சல்மாவின் கொலைக்கு காரணமான சுப்ரமணியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் நான்கு குழந்தைகளின் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்