
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் விவசாயி ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டுக்கு மகள்களை நேற்று இரவு வெட்டி கொலை செய்து விட்டு, போலீசில் சரணடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவிருந்தாள்புரம் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான சுந்தரவேலு.இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பூங்கொடி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
சுந்திரவேலுவிற்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்து அங்கு பணிபுரிந்து வந்த நிலையில் பூங்கொடி தனது தாய் வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளார். மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறை சுந்தரவேலு, பூங்கொடியை பார்க்க வந்து சென்றுள்ளார். தற்போது இந்த தம்பதிக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தையும், 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுந்தரவேலு மொத்தமாக வேலையை விட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
பின்னர் தாய் வீட்டில் இருந்த மனைவியை கூட்டி வந்து திருவிருந்தாள்புரம் பகுதியில் தனியாக வீடு எடுத்து, விவசாயம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். சுந்தரவேலு சிங்கப்பூரில் இருக்கும் போதே மனைவியை சந்தேகப்பட்டு பேசி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சுந்தரவேலு மனைவி பூங்கொடியை சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அதே போல் நேற்று இரவும் தனது மனைவியை சந்தேகப்பட்ட சுந்தரவேலு அவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த சுந்தரவேலு, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி மற்றும் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்துள்ளார்.
விடிந்ததும் அப்பகுதியில் உள்ள தாலுகா காவல் நிலையத்திற்கு சென்ற சுந்தரவேலு மனைவி மற்றும் மகள்களை கொலை செய்ததற்காக சரணடைந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மூவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சுந்தரவேலு மீது வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.