

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர் பகுதியில் உள்ள குளத்தங்கரை தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தமிழரசி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இரண்டு மகன்கள் உள்ளனர். கூலித்தொழில் செய்து வந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது. எனவே ஒரு கட்டத்திற்கு மேல் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து சென்றதாக சொல்லப்படுகிறது.
எனேவ தமிழரசி தனது இரண்டு மகன்கள் மற்றும் மாமியாருடன் கோபாலகிருஷ்ணன் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். கணவனை பிரிந்து தனியாக இருக்கும் தமிழரசிக்கு அவரது கணவரின் தம்பிகளான பாலகிருஷ்ணன் மற்றும் முருகானந்தம் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கின்றனர். இதனை அவர்களது உறவினர்கள் கண்டித்த நிலையில் சில நாட்கள் அமைதியாக இருந்த இருவரும் கடந்த மாதம் குடித்து விட்டு வீட்டிற்கு சென்ற இருவரும் வீட்டில் தனியாக இருந்த அவர்களது அண்ணியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தனது கணவரின் தம்பிகளான பாலகிருஷ்ணன் மற்றும் முருகனின் மீது தமிழரசி அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த பாலகிருஷ்ணனை தேடிவந்த நிலையில் முன் ஜாமீன் பெற்று வெளியில் வந்த பாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவரது அண்ணியை சரமாரியாக வெட்டி கொலை செய்திருக்கிறார்.
பின்னர் தலை மற்றும் உடலை தனியாக வெட்டி வீட்டிற்கு எதிரில் உள்ள கால்வாயில் வீசிவிட்டு தப்பிசென்ற நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தமிழரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் பின்னர் அப்பகுதியில் பதுங்கியிருந்த பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை செய்ததில் தனது அண்ணன் அண்ணியை விட்டு சென்ற நிலையில் தமிழரசி தொடர்ந்து தங்களுக்கு சொந்தமான வீடுகளையும் அபகரிக்க முயற்சி செய்ததாலும் பொய்யான புகார் அளித்து எங்களை ஜெயிலில் தள்ளியதாலும் ஆத்திரத்தில் கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.