“நள்ளிரவில் கள்ளக் காதலனுடன் சேர்ந்து..” - வீட்டில் வைத்து கொல்லப்பட்ட கணவர்.. பிளான் போட்டு செயல் படுத்திய மனைவி!

சரவணன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த அவரது தாய் அலறி துடித்துள்ளார்...
“நள்ளிரவில் கள்ளக் காதலனுடன் சேர்ந்து..” - வீட்டில் வைத்து கொல்லப்பட்ட கணவர்.. பிளான் போட்டு செயல் படுத்திய மனைவி!
Published on
Updated on
2 min read

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பார்வதி நகர் பகுதியை சேர்ந்தவர் 25 வயதுடைய சரவணன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய முத்துலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சரவணன் அதே பகுதியில் கூலி வேலை செய்து வரும் நிலையில் முத்துலட்சுமி குழந்தைகளை பார்த்து கொண்டு வீட்டில் இருந்துள்ளார். அப்போது முத்துலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த 23 வயதுடைய சூர்யா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் சேர்ந்து ஊர் சுற்றி வந்த நிலையில் இது குறித்து அறிந்த சரவணன் அவரது மனைவி மற்றும் சூர்யாவை கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் ஆத்திரமடைந்த சரவணன் அவரது மனைவி முத்துலட்சுமி சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் முத்துலட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே கணவர் தன்னை அடித்து கொடுமை படுத்துவதாக தனது காதலனிடம் தெரிவித்துள்ளார்.

Admin

இதனைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து சரவணனை கொலை செய்ய முடிவு செய்திருக்கின்றனர். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவில் சூர்யா மற்றும் அவரது நண்பரான 20 வயதுடைய சக்தி ஆகிய இருவரும் சேர்ந்து சரவணன் வீட்டுக்கு சென்று, மது போதையில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த சரவணனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். சரவணன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த அவரது தாய் அலறி துடித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் நகர போலீசார் உயிரிழந்த சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அந்த பகுதியில் சுற்றித்திரிந்த முத்துலட்சுமியின் ஆசை நாயகன் சூர்யா மற்றும் முத்துலட்சுமி இந்த கொலை தொடர்பாக கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சூர்யாவின் நண்பர் சக்தி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com