“தற்கொலை செய்து கொண்ட காவலர்” - கர்ப்பமாக்கி ஏமாற்றிய சக ஊழியர்.. பணிச்சுமை கொடுத்து சித்ரவதை செய்த பின்னணி!

பிறகு ராஜியை தொந்தரவு செய்யாமல் விலகியுள்ளார். ஆனால் அன்றிலிருந்து
“தற்கொலை செய்து கொண்ட காவலர்” - கர்ப்பமாக்கி ஏமாற்றிய சக ஊழியர்.. பணிச்சுமை கொடுத்து சித்ரவதை செய்த பின்னணி!
Published on
Updated on
2 min read

கடலூர் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் 26 வயதான சோனியா. இவர் சென்னை ஆவடியில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சோனியா தனது பக்கத்துக்கு ஊரை சேர்ந்த கார் டிரைவர் முகிலன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு தற்போது 6வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் சோனியா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

சோனியா காவலர் பணி மேற்கொண்டு மேற்கொண்டு வந்ததால், குழந்தை முகிலனின் அரவணைப்பில் இருந்துள்ளது. இந்நிலையில் சோனியாவிற்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தன்னோடு 13 படை பிரிவில் பணிபுரிந்த ஆண் காவலர் ராஜி என்பவருடன் சோனியா நட்பாக பழகி வந்துள்ளார். சோனியாவின் சூழ்நிலையை பயன்படுத்தி கொண்ட ராஜி அவரை காதலிப்பதாகவும் விவகாரத்திற்கு பிறகு திருமணம் செய்து கொள்வதாகவும் நம்பிக்கை அளித்துள்ளார்.

இதனை உண்மை என நினைத்த சோனியாவும் ராஜியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதற்கிடையே கர்ப்பமான சோனியா அதை ராஜியிடம் தெரிவித்து திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு மறுத்த ராஜி கருவை கலைத்து வீடு நாம் 8 மாதங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த சோனியா ராஜியை பற்றி உயர் அதிகாரியிடம் புகாரளித்துள்ளார். இதனை அறிந்த ராஜி அன்று இரவே சோனியாவிற்கு போன் செய்து புகாரை வாபஸ் வாங்கும் படி கெஞ்சியுள்ளார்.

எனவே மறுநாள் புகாரை வாபஸ் வாங்கிய சோனியா அதன் பிறகு ராஜியை தொந்தரவு செய்யாமல் விலகியுள்ளார். ஆனால் அன்றிலிருந்து சோனியாவிற்கு அதிக பணிச்சுமை கொடுக்க தொடங்கியுள்ளனர். உடலை நிலை சரியில்லை என கூறியும் கடினமான வேலைகளை சோனியாவிற்கு அளித்துள்ளனர். இதனால் சோனியாவின் கரு கலைந்த நிலையில் அவர் விடுப்பு எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். பிறகு ஒருநாள் முழுக்க தனது கணவர் மற்றும் குழந்தையுடன் பொழுதை கழித்த சோனியா தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

மறுநாள் தனது கணவருக்கு போன் செய்த சோனியா தான் பூச்சி மருந்து குடித்து விட்டதாகவும் குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த முகிலன் சோனியாவின் வீட்டிற்கு அருகில் இருந்தவர்களுக்கு போன் செய்து நடந்ததை தெரிவித்துள்ளார். இந்நிலையில் சோனியாவை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், சிகிச்சை பலனின்றி சோனியா உயிரிழந்துள்ளார்.

தற்கொலை செய்து கொள்ளும் முன்பு தனது கணவருக்கு செல்போன் மூலமாக சோனியா கடிதம் ஒன்றை எழுதி போட்டோ எடுத்து அனுப்பியுள்ளார். “அதில் தனது தற்கொலைக்கு ராஜி தான் காரணம், கணவனை பிரிந்து வாழ்ந்ததாலேயே தன்னை தவறானவள் என்று புரிந்து கொண்டு அனைவரும் ஒரு தலை பட்சமாகவே செயல் படுகின்றனர்” என்று குறிபிட்டுள்ளார். ஒரு பெண் காவலர் கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com