“புருஷன விட்டு என் கூட வந்த இப்ப வேற ஒருத்தன்..” - பாத்திரக்கடை நடத்திய கள்ளக்காதல் ஜோடி.. அடுத்தடுத்து மாறிய பெண்ணின் சாய்ஸ்!

வேறு ஒருவருடன் தகாத உறவில் இருப்பதை அறிந்த அவரது அண்ணன் வாசுதேவன் தனது தங்கையை கண்டித்துள்ளார்..
“புருஷன விட்டு என் கூட வந்த இப்ப வேற ஒருத்தன்..” - பாத்திரக்கடை  நடத்திய கள்ளக்காதல் ஜோடி.. அடுத்தடுத்து மாறிய பெண்ணின் சாய்ஸ்!
Published on
Updated on
2 min read

மதுரை மாவட்டம், வண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் 33 வயதான அரவிந்த் இவருக்கு திருமனாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனது குழந்தையுடன் அதாலை கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் அரவிந்த் வசித்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் வேலைக்கு ஒன்றாக செல்வது வேலை முடிந்து ஒன்றாக ஊர் சுற்றுவது என நெருங்கி பழகி வந்துள்ளனர். எப்போதும் அரவிந்த் மணிகண்டனுடன் சேர்ந்து அவரது வீட்டிலேயே இருந்தார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மணிகண்டனின் மனைவியான 28 வயதுடைய பூபதிக்கும் அரவிந்துக்கும் பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் மணிகண்டன் இல்லாத போது அவரது வீட்டில் தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த மணிகண்டன் அவரது மனைவியை அரவிந்துடனான பழக்கத்தை கைவிடுமாறு கண்டித்துள்ளார். இருப்பினும் பூபதி தனது தகாத உறவை கைவிடாத காரணத்தால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தனது குழந்தைகளுடன் வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளார்.

Admin

பூபதி வேறு ஒருவருடன் தகாத உறவில் இருப்பதை அறிந்த அவரது அண்ணன் வாசுதேவன் தனது தங்கையை கண்டித்துள்ளார். மேலும் அரவிந்திடம் சென்று தனது தங்கையுடனான உறவை கைவிடுமாறு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அரவிந்த் வாசுதேவனை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு சிறைக்கு சென்றுள்ளார். பின்னர் ஜாமீனில் வெளியில் வந்து பூபதியுடன் சேர்ந்து பாத்திரக்கடை வைத்து ஒரே வீட்டில் கணவன் மனைவி போல வசித்து வந்துள்ளனர்.

இதற்கிடையே பூபதிக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருடன் கள்ள காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அரவிந்த் “உன் புருஷன விட்டு என் கூட வந்த இப்ப வேற ஒருத்தன் கூட போக போறியா” என் கேட்டு அவ்வப்போது வாக்குவாதம் செய்து வந்துள்ளார். இதே போல நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, அப்போது ஆத்திரமடைந்த பூபதி அரவிந்தின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

Admin

இதனால் பலத்த காயமடைந்த அரவிந்த் கத்தி கூச்சலிடைவே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து தகவலறிந்த போலீசார் பூபதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com