“குழந்தையின் கொலையை மறைத்த தாய்” - அதிகாலையில் வீட்டுக்கு வந்த உறவினர்.. மூன்று வயது குழந்தையை போய்!

அப்போது கடலூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் பச்சையம்மாள் குழந்தைகளோடு
“குழந்தையின் கொலையை மறைத்த தாய்” - அதிகாலையில் வீட்டுக்கு வந்த உறவினர்.. மூன்று வயது குழந்தையை போய்!
Published on
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் ஆடுர் பகுதியை சேர்ந்தவர்கள் பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதியினர் இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளுக்கு தேர்வு முடிந்து விடுமுறையில் இருந்துள்ளனர். எனவே பச்சையம்மாளின் தம்பி பாலமுருகனுக்கு போன் செய்து அக்காவையும் குழந்தைகளையும் தனது வீட்டிற்கு அனுப்புமாறு கூறியுள்ளார். 

மனைவியின் தம்பி தானே குழந்தைகளும் மகிழ்ச்சியாக உறவினர்களோடு இருக்கட்டும் என பாலமுருகன் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் (ஜூன் 17) தேதி காலை பாலமுருகனின் அக்காவுக்கு போன் செய்த பச்சையம்மாள் நான்கு வயதான தனது குழந்தை இறந்து விட்டதாகவும். கடலூர் அரசு மருத்துவமனையில் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாலமுருகனின் அக்கா தனது உறவினர்களை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மருத்துவமனையில் விசாரித்த போது அது போல எந்த குழந்தையும் அனுமதிக்க படவில்லை என கூறியுள்ளனர். எனவே இரு குழுக்களாக பிரிந்த உறவினர்கள் குழந்தைகளையும் அவரது தாயையும் தேடிவந்துள்ளனர். அப்போது கடலூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் பச்சையம்மாள் குழந்தைகளோடு அமர்ந்திருந்ததை பார்த்த உறவினர்கள் அருகில் சென்றுள்ளனர். நான்கு வயது பெண் குழந்தை உடலில் காயங்களுடன் மூச்சு பேச்சி இல்லாமல் இருந்துள்ளது. 

Admin

உடனே குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதை பற்றி பச்சையம்மாள் இடம் கேட்டுள்ளனர். அதற்கு பச்சையம்மாள் குழந்தை வண்டியில் இருந்து விழுந்து அடிபட்டதாக கூறியுள்ளார். இதனை மறுத்த குழந்தைகள் ஜீவா என்ற ஒரு உறவினர் வந்து சிறுமியை தாக்கியதாக கூறியுள்ளனர். 

இது குறித்து உறவினர்கள் போலீசில் தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் குழந்தையின் உறவினரான ஜீவாவை கைது செய்துள்ளனர். விடுமுறைக்காக பாட்டி வீட்டிற்கு சென்ற குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com