“8 மாதங்களுக்கு பின் விலகிய மர்மம்” - கணவரை பிரிந்து வாழ்ந்த இளம் பெண்.. சேர்த்து வைப்பதாக கூறி கொலை செய்த மாந்திரீகர்!

இரண்டு தினங்களுக்கு முன்பு சிவசாமி என்பவரை கையும் களவுமாக பிடித்த போலீசார் ஆதாரத்துடன் விசாரித்துள்ளனர். அப்போது சிவசாமி கயல் விழியை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.
Nellai murder
Nellai murderNellai murder
Published on
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் நெல்லை நகராட்சி பழவூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி இவரது மகள் 28 வயதான கயல் விழி. கயல்விழி தனது கணவரை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு கயல் விழி கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில் வெகுநேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். எனவே கயல் விழியை காணவில்லை என அவரது உறவினர்கள் நெல்லை காவல் துறையில் புகாரளித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

கயல் விழி காணாமல் போனதற்கு முன்னாள் கயல்விழி கடைசியாக யார் யாரை சந்தித்துள்ளார். எங்கு சென்றுள்ளார், என்று விசாரித்தபோது கடைசியாக அவர் சந்தித்த சிலரை பிடித்து காவல் துறையினர் கயல் விழி பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் கயல்விழி காணாமல் போனதற்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லாதது போல பதிலளித்துள்ளனர்.

இருப்பினும் அவர்களை தொடர்ந்து கண் கணித்து கொண்டு, போலீசார் வழக்கை விசாரித்து வந்துள்ளனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு சிவசாமி என்பவரை கையும் களவுமாக பிடித்த போலீசார் ஆதாரத்துடன் விசாரித்துள்ளனர். அப்போது சிவசாமி கயல் விழியை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.

விசாரணையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த கயல்விழி கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் கொட்டாரத்தை சேர்ந்த மாந்திரீக வாதியான சிவசாமியை அணுகியுள்ளார். போலியான பரிகாரங்களை செய்து சிவசாமி கயல்விழியிடம் இருந்து தொடர்ந்து பணம் பறித்து வந்துள்ளார்.ஆனால் கணவருடன் சேர்வது தொடர்பாக எந்த முன்னேற்றம் இல்லாமல் இருந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கயல்விழி சிவசாமியை தொடர்ந்து தொந்தரவுக்கு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கயல்விழியின் பலவீனத்தை அறிந்த சிவசாமி தனது உறவினர்களான மாயாண்டி, சிவனேஸ்வரி, கண்ணன் ஆகிய மூவருடன் கூட்டு சேர்ந்து கயல்விழியை கொலை செய்து நகை பறிக்க திட்டமிட்டுள்ளனர். அதன் படி சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என கயல் விழியை தனியாக வர சொல்லி இருக்கிறார் சிவசாமி.

இந்நிலையில் சுசீந்திரம் பகுதி வந்த கயல்விழியை காரில் கடத்தி சென்று சுசீந்திரம் பகுதிக்கு அருகில் காரில் வைத்தே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பிறகு கயல்விழியின் நகைகளை எடுத்துக்கொண்டு அவரின் உடலை சேரன்மகாதேவி அருகே உள்ள 80 அடி மணிமுத்தாண்குளம் கால்வாயில் யாருக்கும் தெரியாமல் வீசிச் சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கயல்விழியின் உடலை மணிமுத்தாண்குளம் கால்வாயில் தேடிவருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com