"என் மகளை கொன்று வீசிவிட்டார்கள்" வேதனையில் துடித்த தந்தை - 'வரதட்சணை' கொடுமையால் பறிபோன உயிர்

திருமணமாகி 17 மாதங்கள் கூட ஆகாத நிலையில், 25 வயதான புதிதாக திருமணமான பெண் தனது மாமியார் வீட்டின் கூரையிலிருந்து தவறி விழுந்ததில் அவர் உயிரிழந்ததாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Dowry death case
Dowry death caseDowry death case
Published on
Updated on
2 min read

திருமணமாகி 17 மாதங்கள் கூட ஆகாத நிலையில், 25 வயதான புதிதாக திருமணமான பெண் தனது மாமியார் வீட்டின் கூரையிலிருந்து தவறி விழுந்ததில் அவர் உயிரிழந்ததாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வரதட்சணைக்காக தீபிகா மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். திருமணம் ஆகி மூன்று-நான்கு மாதங்களில் பிரச்சனைகள் தொடங்கியதாக தீபிகாவின் தந்தை கூறியுள்ளார். "நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. அது அப்படியே கடந்து போகட்டும், கடந்து போகட்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம். அவளைக் காப்பாற்ற நாங்கள் கடுமையாக முயற்சி செய்தோம்," என்று, தீபிகாவின் தந்தை கூறியுள்ளார்.

தற்போது பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தீபிகாவின் கணவர் ரித்திக் தன்வார் மற்றும் மாமனார் மனோஜ் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுத் திருமணமான பெண் ஒருவர் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்ததாக இரவு நேரத்தில் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கு தொடர்பாக அப்பெண்ணின் கணவர் ரித்திக் தன்வார் மற்றும் மாமனார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர், என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தீபிகாவின் தந்தை அளித்த புகாரின்படி, திருமணத்தில் கொடுக்கப்பட்ட வரதட்சணையில் அப்பெண்ணின் மாமியார் வீட்டார் அதிருப்தி அடைந்துள்ளனர்.

25 வயதான அந்தப் பெண்ணின் தந்தை சஞ்சய் நகர், 2024 டிசம்பரில் நடந்த திருமணத்தின்போது 11 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கமாகவும், ஒரு ஸ்கார்பியோ காரையும் கொடுத்ததாகக் கூறுகிறார். மேலும், திருமணத்திற்காக 1 கோடி ருபாய் வரை செலவு செய்ததாகவும் அவர்கள் கூறினர். இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அன்று, தீபிகா அழுதுகொண்டே தனது குடும்பத்தினரைத் தொலைபேசியில் அழைத்து, தனது கணவர் மற்றும் மாமியார் வீட்டினரால் தாக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

தீபிகாவின் தந்தை, சில உறவினர்களுடன், அன்று மாலை மாமியார் வீட்டிற்குச் சென்று அவருக்குள் ஏற்பட்ட தகராறைத் தீர்க்க முயன்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், தீபிகா கூரையிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்ததாக குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. தீபிகாவின் தந்தை தற்கொலை என்ற கோணத்தை நிராகரித்து, தன் மகளின் மரணத்தை ஒரு "கொலை" என்று குறிப்பிட்டார்.

"அவர்கள் அவளைக் கொன்றுவிட்டார்கள். அவளை அடித்த பிறகு, கூரையிலிருந்து கீழே தள்ளிவிட்டார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து இதைச் செய்தார்கள். இது என்ன தற்கொலை பேச்சு? இது கொலை. அவள் வயிற்றில் கத்தியாலோ அல்லது ஸ்க்ரூடிரைவராலோ குத்தப்பட்டிருக்கிறாள்," என்று அந்த பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.

"வரதட்சணை பேராசையால் அவளைக் கொன்றுவிட்டன. கடந்த 10 மாதங்களாக, அவள் தனது அவல நிலையைப் பற்றி எங்களிடம் தொடர்ந்து கூறி வந்தாள், ஆனால் நாங்கள் அவளிடம் பேசிப் புரியவைக்க முயன்றோம். ஆனாலும், அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை. நாங்கள் நேற்றுகூட பேசினோம். நான் நேற்று அவளைச் சந்தித்தும் இருந்தேன். நாங்கள் வீட்டிற்குப் புறப்பட்ட உடனேயே, நள்ளிரவு 12:30 மணிக்கு எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. அவள் உடலில் காயங்கள் தெளிவாகத் தெரிகின்றன. அவளைக் கொன்ற பிறகு, அவர்கள் அவளைக் கூரையிலிருந்து கீழே தள்ளிவிட்டனர்," என்று அந்தத் தந்தை கூறினார். மேலும், மருத்துவமனையில் தீபிகாவின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவரது மூக்கு மற்றும் காதுகளில் இருந்து இரத்தம் வந்ததாகவும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com