
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் கூலி தொழில் செய்து வரும் நிலையில் இவருக்கு 27 வயதில் சூர்யா என்ற மகனும், 21 வயதில் சிவசுதன் என்ற மகனும் உள்ளனர். சூர்யா அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் சிவசுதன் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வந்த நிலையில் நேற்று இரவு வேலை முடித்து விட்டு இருவரும் வீட்டில் படுத்து உறங்கியுள்ளனர்.
இன்று காலை சூர்யா அவரது வீட்டில் வயிற்றில் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் மிதத்தந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசில் தகவலாளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வந்த நிலையில் சூர்யாவை அவரது தம்பி சிவசுதனே கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த சிவசுதனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் “தனது அண்னன் சூர்யா தனது மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாகவும் பலமுறை கண்டித்து அந்த உறவை இருவரும் கைவிடவில்லை, இவர்களின் இந்த உறவு அக்கம் பக்கத்தினரும் தெரிந்து அவர்கள் தவறாக பேசியதால் ஆத்திரம் அடைந்து கொலை செய்துவிட்டேன்” என தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்திய போது சிவசுதனுக்கு இன்னும் திருமணமாகாத செய்தி தெரியவந்துள்ளது.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் மேலும் விசாரித்ததில் சிவ சுதனுக்கு சற்று மனநலம் பாதித்திருப்பதாக அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல் துறையினர் சிவசுதனுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு இந்த வழக்கில் என்ன நடந்தது என்ற முழுவிவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். உடன்பிறந்த தம்பியே அண்ணனை கொலை செய்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.