“நான்கு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை” - சாக்லேட் தருகிறேன் என மறைவாக அழைத்து.. 65 வயது முதியவர் செய்த அசிங்கம்!

அதே தெருவை சேர்ந்த நான்கு வயது சிறுமி தனது சக நண்பர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்த பெரியசாமி...
“நான்கு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை” - சாக்லேட் தருகிறேன் என மறைவாக அழைத்து.. 65 வயது முதியவர் செய்த அசிங்கம்!
Published on
Updated on
2 min read

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 65 வயதுடைய பெரியசாமி. இவருக்கு திருமணமாகி கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள் உள்ள நிலையில் கீதாவிற்கு சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கீதா மற்றும் அவரது கணவர் பெருமாள் அருந்ததி காலனியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்திருக்கின்றனர். மகளை பார்க்க அவ்வப்போது பெரியசாமி சேலத்துக்கு சென்று வந்திருக்கிறார்.

அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்பு மகளை பார்க்க அவரது வீட்டிற்கு வந்த பெரியசாமி கீதா வீட்டில் இரண்டு நாட்கள் தங்க முடிவு செய்து அவர்களது வீட்டில் தங்கியிருந்துள்ளார். அப்போது அதே தெருவை சேர்ந்த நான்கு வயது சிறுமி தனது சக நண்பர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்த பெரியசாமி கடை சென்று சாக்லேட் வாங்கி கொண்டு அந்த சிறுமியிடம் சென்று “ உனக்கு இந்த சாக்லேட் வேணுமா என் கூட வா தரேன்” என கூறி சிறுமியை மறைமுகமான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

Admin

பின்னர் சிறுமி அழுதுகொண்டே வந்ததையும் பின்னர் முதியவர் அப்பகுதியில் இருந்து வந்ததையும் பார்த்த அப்பகுதி மக்கள் சிறுமியின் பெற்றோர்களிடம் சொல்லி சிறுமி மற்றும் முதியவரை நேரடியாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு காவலர்கள் முன்னிலையில் சிறுமியிடம் விசாரித்த போது சிறுமி “தாத்தா சாக்லேட் கொடுக்குறேன் கூட்டிட்டு போய் இங்கயெல்லாம் என்னை தொட்டு..” என தெரிவித்துள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திலேயே முதியவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பின்னர் அவர்களை சமாதானம் செய்த போலீசார் சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் முதியவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 4 வயது சிறுமிக்கு 65 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com