“மாமனாரை கொலை செய்த மருமகன்” - 15 ஆண்டுகளாக தெருவோரங்களில் இருந்த முதியவர்.. யாசகம் கேட்டு வாழ்ந்த வந்த நிலையில் பரிதாபம்!

அந்தப் பகுதியில் இருந்து சிவன் கோவில் தேரடி வரை இருவரும் தாக்கி கொண்டே சென்றுள்ளனர். இதில் ஆசீர்வாதம் தாக்கியதில் மருமகன் அஜய்க்கு..
“மாமனாரை கொலை செய்த மருமகன்” - 15 ஆண்டுகளாக தெருவோரங்களில் இருந்த முதியவர்.. யாசகம் கேட்டு வாழ்ந்த வந்த நிலையில் பரிதாபம்!
Published on
Updated on
2 min read

தூத்துக்குடியை சேர்ந்தவர் ஆசீர்வாதம். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இரண்டு மகள்களுக்கு திருமணமாகி தங்களது கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். கூலித் தொழிலாளியான இவர் மகள்களின் திருமணத்திற்கு பிறகு தனது குடும்பத்தை விட்டு பிரிந்து சுமார் 15 ஆண்டுகளாக தெருவோரங்களில் கிடைக்கும் இடத்தில் தூங்கி வசித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் மதுபோதைக்கு அடிமையாகி நிலையில் அப்பகுதி மக்களிடம் யாசகம் கேட்டு மது அருந்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் யாசகம் பெற்ற ஆசிர்வாதம் அந்த பணத்தை சேமித்து வைத்து இரவு மது அறுந்து தூத்துக்குடி 2ஆம் தெரு பகுதி அருகே உள்ள ஒரு அரசு மதுபான கூடத்தில் மது அருந்தி உள்ளார் அப்போது அங்கே ஆசிர்வாதத்தின் மகளை திருமணம் செய்த மருமகன் அஜய் என்பவர் மது அருந்தி வந்துள்ளார். இருவரும் மது அருந்திவிட்டு வெளியில் வரும்போது மாமனார் மற்றும் மருமகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் இடையே வாக்குவதம் முற்றி அடிதடி தகராறாக மாறி உள்ளது.

இதில் இருவரும் ஒருவரை ஒருவர் அங்கிருந்த கட்டையை எடுத்து தாக்கிக்கொண்டனர். அந்தப் பகுதியில் இருந்து சிவன் கோவில் தேரடி வரை இருவரும் தாக்கி கொண்டே சென்றுள்ளனர். இதில் ஆசீர்வாதம் தாக்கியதில் மருமகன் அஜய்க்கு கால் மற்றும் உடலின் தலை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த அஜய் கீழே கிடந்த கட்டையை தூக்கி மாமனாரின் உச்சி மண்டையில் தாக்கியுள்ளார். இதில் மது போதையில் இருந்த ஆசிர்வாதம் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் தேரடி பகுதி அருகே கீழே சரிந்தார்.

Admin

இதைத்தொடர்ந்து தகராறை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மத்திய பாகம் காவல் துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடந்த ஆசிர்வாதத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஆசிர்வாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் ஆசீர்வாதம் இறந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து மத்திய பாகம் காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் மது போதையில் மாமனார் மருமகன் இடையே ஏற்பட்ட தகராறில் மருமகன் கட்டையால் தலையில் தாக்கியதில் மாமனார் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com