“நண்பனின் தங்கைக்காக தட்டி கேட்ட வாலிபர்” - பேருந்து நிலையத்தில் துரத்திய மர்ம கும்பல்.. புதரில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம்!

வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் வாகனத்தை நிறுத்திவிட்டு ராஜேஷை அரிவாளுடன் விரட்டியுள்ளனர்..
“நண்பனின் தங்கைக்காக தட்டி கேட்ட வாலிபர்” - பேருந்து நிலையத்தில் துரத்திய மர்ம கும்பல்.. புதரில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம்!
Published on
Updated on
2 min read

சிவகங்கை மாவட்டம், மதுரைமுக்கு பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் மற்றும் மகன் என இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் 19 வயதுடைய மகன் ராஜேஷ் வெளியூரில் தங்க வேலை பார்த்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவர் வெளியூரில் வேலை செய்து வந்த நிலையில் விடுமுறை தினம் என்பதால் தனது சொந்த ஊரான சிவகங்கைக்கு விட்டுவிட்டு குடும்பத்துடன் விடுமுறையை கழித்த அவர் இன்று மீண்டும் வேலை செய்யும் ஊருக்கு புறப்பட்டுள்ளார்.

எனவே ராஜேஷின் நண்பர்களான பிரித்திவி, பேரரசு ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ராஜேஷை பேருந்து நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கின்றனர். மேலும் பேருந்து ஏற்றி விட்டு செல்லலாம் என ராஜேஷுடன் சேர்ந்து அவரது நண்பர்களும் பேருந்திற்காக காத்திருந்த நிலையில் அப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் வாகனத்தை நிறுத்திவிட்டு ராஜேஷை அரிவாளுடன் விரட்டியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஷ் தன்னை காப்பாற்றிக்கொள்ள எதிரே இருந்த பெட்ரோல் பங்க் பின்புறம் ஓடியுள்ளார்.

Admin

இருப்பினும் ராஜேஷை விடாமல் விரட்டி சென்ற அந்த கும்பல் பெட்ரோல் பங்கின் பின்புறமுள்ள இருட்டு பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் கழுத்து, மற்றும் தலை பகுதியில் படுகாயமடைந்த ராஜேஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்தார். மேலும் அவரை காப்பாற்ற சென்ற அவரது நண்பர்களான பிரிதிவி மற்றும் பேரரசு ஆகியோரையும் மர்ம கும்பல் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் நகர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ராஜேஸின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்து ராஜேஷை கொலை செய்தது யார் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் ராஜேஷ் இறந்து கிடந்ததை கண்ட அவரது தாயாரும், சகோதரியும் கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Admin

மேலும் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த ராஜேஷ் கடத்த சில மாதங்களுக்கு முன்பு அவரது நண்பரின் தங்கையை கிண்டல் செய்த கும்பலை தட்டி கேட்டுள்ளார். எனவே இவருக்கு அந்த கும்பலுக்கும் முன்பகை இருந்த நிலையில் அவர்கள் கொலை செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் உயிரிழந்த ராஜேஷ் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்கிற கோணத்தில் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர் காவல்துறையினர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com