நெய்யும், ஒயினும் பயன்படுத்தி நடந்த சிலிண்டர் பிளாஸ்ட் நாடகம்.. காதலனை முன்னாள் Boyfriend-உடன் சேர்ந்து கொன்ற மாணவி!

கொலையை மறைக்க ஒரு சினிமா ஸ்டைல் திட்டத்தை அவர் வகுத்துள்ளார்...
upsc-murder-case
upsc-murder-case
Published on
Updated on
2 min read

டெல்லியில் ஐ.ஏ.எஸ். (UPSC) தேர்வுக்காகத் தயாராகி வந்த ஒரு வாலிபரை, அவருடன் சேர்ந்து வாழ்ந்த லிவ்-இன் பார்ட்னரும் அவரது முன்னாள் காதலரும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலையை மறைக்க அவர்கள் அரங்கேற்றிய நாடகமும், கொடூரமான திட்டமும் அனைவரையும் உறைந்துபோகச் செய்துள்ளது. காந்தி விஹாரில் வசித்து வந்த ராம் கேஷ் மீனா (32 வயது) என்ற அந்த இளைஞர், அக்டோபர் 6-ஆம் தேதி அதிகாலை நேரத்தில் அவரது ஃபிளாட்டில் ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் விபத்தில் உடல் கருகி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். முதலில் இது ஒரு விபத்து என்றுதான் போலீஸ் நினைத்தது. ஆனால், ராம் கேஷின் குடும்பத்தார் சந்தேகம் கிளப்பியதால், கேஸ்-ஐ இன்வெஸ்டிகேட் செய்ய ஆரம்பித்து, கடைசியில் இது ஒரு பயங்கரமான கொலை என்பதை போலீஸ் கண்டுபிடித்தது.

இந்தக் கொடூரக் கொலை தொடர்பாக, அவரது லிவ்-இன் பார்ட்னராக இருந்த அம்ரிதா சௌகான் (21 வயது), அவரது முன்னாள் காதலன் சுமித் காஷ்யப் (27 வயது), மற்றும் சுமித்தின் நண்பர் சந்தீப் குமார் (29 வயது) ஆகிய மூவரையும் டெல்லி போலீஸ் கைது செய்தது. இவர்கள் மூவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். விசாரணையில், ராம் கேஷ் மீனா, அம்ரிதாவின் சில பிரைவேட் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஒரு ஹார்ட் டிஸ்க்கில் சேமித்து வைத்திருந்ததாகவும், அதை டெலீட் செய்ய மறுத்ததால்தான் இந்த கொலையைச் செய்ய முடிவெடுத்ததாகவும் அம்ரிதா போலீஸிடம் கன்பெஸ் செய்துள்ளார்.

அம்ரிதா, தடய அறிவியல் படித்து வந்ததால், Crime Web Series பார்ப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகம். அதனால், கொலையை மறைக்க ஒரு சினிமா ஸ்டைல் திட்டத்தை அவர் வகுத்துள்ளார். அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், சுமித் மற்றும் சந்தீப்புடன் ராம் கேஷின் ஃபிளாட்டுக்கு அம்ரிதா சென்றுள்ளார். அங்கே ராம் கேஷை பயங்கரமாகத் தாக்கி, பின்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.

கொலை செய்த பிறகு, ராம் கேஷின் உடலை எரித்து ஆக்சிடென்ட் போலக் காட்ட, ஒரு விநோதமான முறையைக் கையாண்டிருக்கிறார்கள். ராம் கேஷின் உடல் மீது ஆயில் (எண்ணெய்), நெய், மற்றும் ஒயின் (மதுபானம்) ஆகியவற்றைப் போர்-ஐ ஊற்றியுள்ளனர். பிறகு, சமையலறையில் இருந்த எல்.பி.ஜி. சிலிண்டரை எடுத்து வந்து ராம் கேஷின் தலைக்கு அருகில் வைத்து, அதன் ரெகுலேட்டர் வால்வைத் திறந்துவிட்டு, லைட்டர் மூலம் தீ மூட்டி விட்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து சிலிண்டர் வெடித்துள்ளது. இதனால், ராம் கேஷின் உடல் முழுவதும் கருகி, இது ஒரு விபத்து என்றே பலரும் நம்பியுள்ளனர்.

ஆனால், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி ஃபுட்டேஜ்-ல், இரண்டு பேர் முகத்தை மூடிக்கொண்டு உள்ளே போவதும், பிறகு அம்ரிதாவும் மற்ற நபரும் வெளியேறுவதும் பதிவாகியிருந்தது. மேலும், அம்ரிதாவின் மொபைல் லொக்கேஷன் அந்தச் சமயத்தில் கிரைம் சீன்-க்கு அருகில் இருந்ததையும் போலீஸ் கண்டுபிடித்தது. இதனையடுத்து, அம்ரிதா உட்பட மூவரையும் கைது செய்து, ராம் கேஷ் மீனாவின் ஹார்ட் டிஸ்க் மற்றும் திருடப்பட்ட மற்ற பொருட்களையும் போலீஸ் ரெக்கவர் செய்தது. ஒரு சினிமா திரில்லர் ஸ்டோரி போலவே நடந்த இந்தக் கொலைச் சம்பவம், டெல்லியில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com