“ஒடிஷாவுக்கு சென்ற இளைஞர்” - கஞ்சா வாங்குவதில் ஏற்பட்ட தகராறு.. பணம் கேட்டு மிரட்டி கொலை செய்யப்பட்ட அவலம்!

அஜய் கொடைக்கானலுக்கு செல்லாமல் செங்குன்றத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான அபினேஷ் என்பவருடன் சேர்ந்து ஒடிஷாவுக்கு கஞ்சாவை வாங்க சென்றுள்ளார்.
“ஒடிஷாவுக்கு சென்ற இளைஞர்” - கஞ்சா வாங்குவதில் ஏற்பட்ட தகராறு.. பணம் கேட்டு மிரட்டி கொலை செய்யப்பட்ட அவலம்!
Published on
Updated on
2 min read

திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹரி. இவரை ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வரும் நிலையில் திருமணமாகி ஜோதி என்ற மனைவியும், ஏன்ஜெல் என்ற மகளும், அஜய் என்ற மகனும் உள்ளனர். ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த அஜய் தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்டுள்ளார். இந்நிலையில் அடைந்த (ஜூன் 27) தேதி நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால் அஜய் கொடைக்கானலுக்கு செல்லாமல் செங்குன்றத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான அபினேஷ் என்பவருடன் சேர்ந்து ஒடிஷாவுக்கு கஞ்சாவை வாங்க சென்றுள்ளார். அங்கு சென்று கஞ்சாவை வாங்கி திரும்பிக் கொண்டிருந்த போது இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு கஞ்சா கும்பலுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் அந்த கும்பல் அஜயை கடத்தி சென்றுள்ளனர். கடத்திய கும்பல் அஜயின் குடும்பத்தினருக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதில் பதற்றமடைந்த அஜயின் தாய் மற்றும் சகோதரி இதுகுறித்து போலீசாரிடம் தகவல் அளித்துள்ளனர். விரைந்து செயல்பட்ட போலீசார் அந்த கும்பலிடம் அஜயின் அண்ணன் பேசுவது போல நடித்து அவர்கள் கேட்கும் பணத்தை தருவதாக உறுதியளித்துள்ளனர். அந்த என்னை போலீசார் டிராக் செய்ய தொடங்கியுள்ளனர். பிறகு இரண்டு முறை போன் செய்து பணத்தை கேட்ட அந்த கும்பல் தனது போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளது. இதனால் காவலர்களுக்கு தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜயுடன் சென்ற அபினேஷிற்கு போன் செய்த போலீசார் அஜயை பற்றிய தகவலை கேட்டு அறிந்துள்ளனர். இதனை அடுத்து ஒடிஷா சென்ற போலீசார் இரண்டு நாட்கள் தேடுதலுக்கு பிறகு அஜயை சடலமாக மீட்டுள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அபினேஷை கைது செய்த போலீசார் அவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Admin

அஜய் கொலை செய்யப்பட்டதை அறிந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அஜயின் சகோதரி தனது தம்பியின் கொள்ளைக்கு அதே பகுதியை சேர்ந்த சேட்டு மற்றும் அவரது நண்பர்கள் தான் காரணம் என்று அவர்கள் இதனை பிளான் போட்டு செய்துள்ளனர் என்றும் எனவே அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சேட்டு என்பவருக்கும் அஜயின் குடும்பத்திற்கும் முன்பகை இருக்கும் நிலையில் கடந்த ஒரு மத அவர்கள் தன அபினேஷை அஜயுடன் பழக வைத்து இவ்வாறு ஒடிஷா அழைத்து சென்று கொலை செய்துள்ளனர். பணம் கேட்டு மிரட்டியது எல்லாம் வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் செய்த நாடகத்தின் ஒரு பகுதி தான் என தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com