“அங்கிள் எங்களை விட்டுடுங்க ப்ளீஸ்” - மூன்று சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை.. கரூரில் இடியாப்ப வியாபாரி செய்த கொடூரம்!

7 வயதுடைய சிறுமி தனக்கும் தனது தோழிகளுக்கும் நடந்தது குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்...
“அங்கிள் எங்களை விட்டுடுங்க ப்ளீஸ்” - மூன்று சிறுமிகளை  அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை.. கரூரில் இடியாப்ப வியாபாரி செய்த கொடூரம்!
Published on
Updated on
1 min read

கரூர் மாவட்டம், தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 43 வயதுடைய பக்கீர் முகமது. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முபீனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் வீட்டிலேயே இடியாப்பம் செய்து இருசக்கர வாகனத்தில் வைத்து சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்திருக்கிறார். குறிப்பாக கரூர் நகர பகுதி மற்றும் காந்திகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் இடியாப்பம் விற்பனை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் தொழிற்பேட்டையில் பக்கீர் முகமது வீட்டின் அருகில் அதே பகுதியை சேர்ந்த சில சிறுமிகள் விளையாடி கொண்டு இருந்திருக்கின்றனர். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்கீர் முகமதுவும் இடியாப்ப வியாபாரி விற்பனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்திருக்கிறார். மேலும் அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாக சொல்லப்படுகிறது.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பக்கீர் முகமது வெளியில் விளையாடி கொண்டிருந்த 12 வயதுடைய சிறுமி, 10 வயதுடைய சிறுமி, 7 வயதுடைய சிறுமி என மூன்று சிறுமிகளை ஆசை வார்த்தைகள் கூறி வீட்டிற்குள் அழைத்திருக்கிறார். பின்னர் மூன்று சிறுமிகளும் வீட்டிற்குள் சென்ற நிலையில் வீட்டின் கதவை பூட்டிய பக்கீர் முகமது மூன்று சிறுமிகளிடமும் பாலியல் ரீதியாக அத்துமீறி இருக்கிறார். “அங்கிள் எங்களை விட்டுடுங்க ப்ளீஸ்” என சிறுமிகள் கதறியுள்ளனர். பின்னர் இதனை வெளியில் சொல்லக்கூடாது எனக்கூறி சிறுமிகளை வெளியில் விட்டிருக்கிறார்.

அவர் அவர் வீட்டிற்கு சென்ற மூன்று சிறுமிகளில் 7 வயதுடைய சிறுமி தனக்கும் தனது தோழிகளுக்கும் நடந்தது குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதை கேட்டு ஆத்திரமடைந்த 7 வயது சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் பற்றி மற்ற சிறுமிகளின் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அனைவரும் சேர்ந்து பக்கீர் முகமது மீது காவல் நிலையத்தில் புகாரளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இடியாப்ப வியாபாரி பக்கீர் முகமது விளையாடி கொண்டிருந்த சிறுமிகளை வீட்டுக்குள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. எனவே அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விளையாடி கொண்டிருந்த மூன்று சிறுமிகளை வீட்டில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com