"வீட்டின் முன் நிர்வாணமாக பூஜை செய்த ஆசாமி" - மூவரை கொலை செய்ய இரும்புக் கம்பியுடன் விடிய விடிய காத்திருப்பு!

அப்போது குமரன் வீட்டிற்கு சென்ற பரசுராமன் மற்றும் அவரது தம்பி சாந்தகுமார் குமரனின் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை
 "வீட்டின் முன் நிர்வாணமாக பூஜை செய்த ஆசாமி" -  மூவரை கொலை செய்ய இரும்புக் கம்பியுடன் விடிய விடிய காத்திருப்பு!
Published on
Updated on
2 min read

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் ஊசி கல்மேடு பகுதியை சேர்ந்தவர் 33 வயதான பரசுராமன். இவர் மேஸ்திரி வேலை செய்து வரும் நிலையில் ஊரில் மாந்திரீக பூஜைகளை செய்து வந்துள்ளார். வழக்கமாக இடுப்பில் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு பூஜைகள் செய்யும் பரசுராமன் சில நாட்களாக நிர்வாணமாக பூஜை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. அதே போல நேற்று முன்தினம் இரவு பரசுராமன் தனது வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் ராஜாத்தி என்பவரின் வீட்டின் எதிரில் நின்று நிர்வாணமாக பூஜை செய்து கொண்டு இருந்துள்ளார்.

இதனை பார்த்த ராஜாத்தியின் உறவினரான 27 வயதுடைய குமரன் என்பவர் பரசுராமரிடம் பூஜை குறித்து கேட்டு சத்தமிட்டுள்ளார். குமரனின் கூச்சல் சத்தம் கேட்டு குமரனின் அண்ணி மற்றும் அவரது பெரியம்மா வீட்டை விட்டு வெளியில் வந்துள்ளனர். இதனை பார்த்த பரசுராமன் தனது வீட்டிற்கு சென்று லுங்கி கட்டிக்கொண்டு எதுவும் தெரியாதது போல தனது அம்மா வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார் குமரன் மற்றும் உறவினர்கள் பரசுராமனை வழிமறித்து பூஜை குறித்து மீண்டும் கேட்டுள்ளனர், அதற்கு பரசுராமன் குமாரனை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் குமரன் மற்றும் பரசுராமன் தரப்பினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பரசுராமன் மற்றும் குமரன் தரப்பினரை சமாதானம் செய்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து குமரனின் உறவினர்கள் சிலர் திருத்தணிக்கு செல்ல புறப்பட்ட நிலையில் குமரனும் அவரது தாயாரும் மட்டும் அவர்களது வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது குமரன் வீட்டிற்கு சென்ற பரசுராமன் மற்றும் அவரது தம்பி சாந்தகுமார் குமரனின் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்ய முயற்சிசெய்துள்ளனர். இதனால் அலறிய குமரனின் தாய் அருகில் இருந்த உறவினர் வீட்டிற்கு சென்று அவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்து குமரனின் அண்ணி வீட்டிற்கு சென்ற பரசுராமன் கையில் இரும்பு ராடு மற்றும் கற்களை வைத்து கொண்டு குமரனின் அண்ணியை தாக்கியுள்ளார் இதில் காயமடைந்த அவர் பயந்து வீட்டிற்குள் சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டுள்ளார். இருப்பினும் குமரனின் அண்ணி வீட்டிற்கு முன்பு நின்று பரசுராமன் “ இப்போது தான் ஒரு கொலை செய்து விட்டு வைத்துள்ளேன். ஒரு கொலை செய்தலும் மூன்று கொலை செய்தலும் ஒரே தண்டனை தான், உன்னை கொல்லாமல் விடமாட்டேன்” என இரும்பு ராடுடன் வீட்டின் வாசலில் காத்திருந்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் குமரன் மற்றும் அவரது அண்ணியை மீட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்துள்ளனர்.

Admin

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டனர் மேலும் தப்பி சென்ற பரசுராமன் மற்றும் அவரது தம்பி சாந்தகுமாரை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். நிர்வாணமாக பூஜை செய்தவரை தட்டிக் கேட்டதற்கு ஒருவர் தலையில் அம்மிக்கல் போட்டு தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com