
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வடகவுஞ்சி பகுதியை சேர்ந்தவர் 31 வயதான கருப்பசாமி. இவர் திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். கருப்பசாமியின் தங்கை பிரியா திருமணமாகி தனது கணவர் மற்றும் மகளுடன் திருப்பூரில் வசித்து வந்துள்ளார். பிரியாவின் மகள் வீட்டிற்கு வெளியில் விளையாடி கொண்டிருந்த போது அவரை நாய் கடித்துள்ளது இதை பார்த்த பிரியா மற்றும் அவரது கணவர் கார்த்திகேயன் மகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.சிறுமியின் உடல்நிலை சரியாக வந்த நிலையில் தங்கை மகளை நாய் கடிதத்தை அறிந்து கருப்பசாமி சிறுமியை பார்க்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சிறுமியை பார்த்து விட்டு கார்திகேயனுடன் மருத்துவ வளாகத்தில் இருந்த டீக்கடைக்கு சென்ற கருப்பசாமி அவரது மச்சனிடம் “எதற்கு கவர்மெண்ட் ஹாஸ்பிடல சேதீங்க” என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவ்விடத்திற்கு வந்த கார்த்திகேயனின் அக்கா கணவர் 51 வயதான குலசிவேலு நாய் கடிக்கு அரசு மருத்துவமனையில் தான் முறையான சிகிச்சை கிடைக்கும் என கூறியுள்ளார். இருவரும் மாறி மாறி பேசிக்கொண்ட நிலையில் கருப்பசாமி குலசிவேலுவை அடித்து கீழே தள்ளியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குலசிவேலு “என்னையே இப்படி பண்ணிட்ட இல்ல” என கேட்டு அங்கிருந்த கத்தியை எடுத்து கருப்பசாமியின் முகம் மற்றும் உடலில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமியை அருகிலிருந்தவர்கள் மீட்டு அதே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் கருப்பசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த நிலையில் வழக்கு பதிவு செய்து குலசிவேலை கைது செய்தனர். மேலும் குலசிவேலுவிடம் விசாரணை நடத்தி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். தங்கை மகளை பார்க்க வந்தவர் அதே மருத்துவமனையில் கொலை செய்யப்பட்டது. மருத்துவனையில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.