“வாழ்க்கை கொடுத்த அண்ணி” - துரோகத்தின் உருவமான மைத்துனர்.. மகனுடன் சேர்ந்து அண்ணன் மகனை கொன்ற கொடூரம்!

பிரதீப்பின் வீட்டிற்கு சென்ற இருவரும் மாறி மாறி பிரதீப்பை சரமாரியாக வெட்டியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு பிரதீப்பின் வீட்டிற்கு சென்ற அக்கம் பக்கத்தினர் பாஸ்கர் மற்றும் அவரது மகனின் கையில் இருந்த கத்தியை பார்த்து பயந்து போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.
Trichy murder
Trichy murderTrichy murder
Published on
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், இவருக்கு திருமணமாகி செல்வி என்ற மனையும், பிரதீப் மற்றும் நிஷாந்தி என பிள்ளைகளும் உள்ளனர். செல்வராஜ் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் செல்வி தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். பிரதீப் ஓட்டுநர் வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் செல்வராஜனின் தம்பி பாஸ்கரன் குடும்பத்துடன் சென்று செல்வியிடம் “அண்ணி உங்க இடத்துல நான் வீடு கட்டிக்குற உங்களுக்கு வேணும் கேக்குறப்ப நான் காலிபண்ணிக்குற” என கேட்டுள்ளார். அதற்கு செல்வி அனுமதி அளித்ததும் செல்வியின் இடத்தில் பாஸ்கரன் வீடு கட்டி வசித்து வந்துள்ளார். காலப்போக்கில் பாலமுருகன் தனது அண்ணிக்கு மரியாதை கொடுக்காமல் அவரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்த பிரதீப் ஊர் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது பாஸ்கரன் வீட்டிற்கு சென்று பிரதீப் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தங்களது நிலத்தையும் திருப்பி தர சொல்லியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த பாஸ்கரன் “இது எங்க இடம் நான் என் காலி பண்ணனும்” என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் பாலமுருகனை தாக்கி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதற்கிடையே வீட்டிற்கு வந்த பாஸ்கரின் மகன் தனது அப்பாவை பிரதீப் தாக்கியதை அறிந்து ஆத்திரம் அடைந்துள்ளார். இதனால் பிரதீப்பை தக்க வீட்டிலிருந்த கத்தியை எடுத்து கொண்டு பிரதீப்பை வீட்டிற்கு சென்றுள்ளார். மகனை தடுக்காமல் பாஸ்கரனும் அவருடன் சென்றுள்ளார். பிரதீப்பின் வீட்டிற்கு சென்ற இருவரும் மாறி மாறி பிரதீப்பை சரமாரியாக வெட்டியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு பிரதீப்பின் வீட்டிற்கு சென்ற அக்கம் பக்கத்தினர் பாஸ்கர் மற்றும் அவரது மகனின் கையில் இருந்த கத்தியை பார்த்து பயந்து போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரதீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தப்பிக்க முயற்சித்த பாஸ்கரன் மற்றும் அவரது 16 வயதுடைய மகனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொந்த தம்பிமகனை தனது மகனுடன் சேர்ந்து ஒருவர் கொலை செய்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com