
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா ஆலத்துடையான்பட்டி மாதாகோவில் தெருவை சேர்ந்த நடராஜின் 33 மகன் சுரேஷ். இவர் அதே பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் முள்ளிப்பட்டியை சேர்ந்த 30 வயதுடைய மாதவிக்கும் கடந்தசில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் சுரேஷ் மாதவி தம்பதிக்கு 6 வயதில் வயதில் அர்ஜுனா என்ற பெண் குழந்தை உள்ளது. மாதவியின் தாய் பாப்பம்மாள் வீடு தொட்டியத்தை அடுத்த முள்ளிப்பாடி கிராமத்தில் காலனி தெருவில் உள்ளது.
தனது மாமியார் வீட்டில் சுரேஷ் மனைவி, மற்றும் மகளுடன் கடந்த 4 மாதங்களாக தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். நேற்று இரவு தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த சுர்ஸ் அவர்கள் சென்ற நிலையில் வீட்டின் அருகே உள்ள பஸ் ஸ்டாப் பக்கத்தில் சுரேஷ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அரிவாளால் சுரேஷை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் கீழே சரிந்த நிலையில் மர்ம நபர்கள் சுரேஷின் தலையை மட்டும் தனியாக துண்டித்து எடுத்து சென்றனர்.
சுரேஷின் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், முசிறி துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், சுரேஷ் ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இதனால் அந்த கொலையால் பாதிக்கப்பட்டவர்கள் பழிக்குப்பழி வாங்கும் எண்ணத்தில் சுரேஷை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சுரேசின் தலையையும், அவரை கொன்ற மர்மநபர்களையும் தேடி வருகின்றனர். வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்