“காமக்கொடூரனின் ஆணுறுப்பை அறுத்த தந்தை” - ஆறு வயது மகளுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை.. ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம்!

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பிரபு ராம் பாபுவுடன் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்திருக்கிறார்...
“காமக்கொடூரனின் ஆணுறுப்பை அறுத்த தந்தை” - ஆறு வயது மகளுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை.. ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம்!
Published on
Updated on
1 min read

உதிர்ப்பிரேதசம் மாநிலம், தியோரிய பகுதியை சேர்ந்தவர் 32 வயதான நடன கலைஞர் பிரபு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு மகள் உள்ள நிலையில் பிரபு ஓரின சேர்க்கையாளர் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அதே பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ராம்பாபு என்பவருடன் பிரபு ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை அறிந்த பிரபுவின் மனைவி தனது கணவரிடம் “இது போல நடந்துகொள்ள வேண்டாம் பின்னர் நமது மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும்” என அறிவுரை கூறியுள்ளார்.

இருப்பினும் பிரபு தொடர்ந்து ராம் பாபுவுடன் பழகி வந்ததனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி பிரபுவை பிரிந்து அவரது மனைவி தனது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பிரபு ராம் பாபுவுடன் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் பிரபுவின் மகள் அவரது தந்தை பார்க்க வேண்டும் பிரபு தங்கியிருந்த வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது பிரபு வேலை காரணமாக வெளியில் சென்றிருந்த நிலையில் ராம்பாபு சிறுமியை வீட்டிற்குள் அழைத்து தூங்க வைத்துள்ளார். பின்னர் சிறுமி ஆழ்ந்து உறங்கிய நேரம் பார்த்து அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து இதை பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என சிறுமியை மிரட்டி அவரது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை அறிந்து கொண்ட பிரபு ராம் பாபுவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் ஆத்திரம் அடங்காத பிரபு ராம் பாபுவின் ஆணுறுப்பை அறுத்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இருப்பினும் தனது மகளின் இந்த நிலைமைக்கு தானும் ஒரு காரணம் என நினைத்து மனம் உளைச்சல் அடைந்த பிரபு அதே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராம்பாபுவின் சத்தம் கேட்டு வீட்டிற்கு சென்ற அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் ராம்பாபுவின் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com