“அண்ணனுக்கு துரோகம் செய்த தம்பி” - 6 மாதங்களாக அண்ணியுடன் நடத்திய தனி குடுத்தனம்.. குழந்தைகளுக்காக ஏங்கிய தந்தை!

சம்பத் மற்றும் அவரது குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்த அக்கம் பக்கத்தினர் சம்பத் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சக்திவேல்
“அண்ணனுக்கு துரோகம் செய்த தம்பி” - 6 மாதங்களாக அண்ணியுடன் நடத்திய தனி குடுத்தனம்.. குழந்தைகளுக்காக ஏங்கிய தந்தை!
Admin
Published on
Updated on
2 min read

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்துள்ள வள்ளி பட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் 32 வயதான பிரபு இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உமா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகளும் 9 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில் உமாவிற்கு பிரபுவின் தம்பியான 28 வயதுடைய சக்திவேலுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சக்திவேல் உமா மற்றும் அவரது குழந்தைகளை அழைத்து சென்று தனியாக வீடு எடுத்து வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனை தெரிந்து கொண்ட பிரபு தனது மனைவி மற்றும் சக்திவேலை கண்டித்துள்ளார். இருப்பினும் உமா சக்திவேலுடன் தொடர்ந்து வசித்து வந்துள்ளார், இதனால் ஆத்திரம் அடைந்த பிரபு நேற்று இரவு தாது குழந்தைகளை மட்டுமாவது தன்னுடன் அனுப்பி வைக்குமாறு  சக்திவேல் வீட்டிற்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளார். 

Admin

எனவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி சக்திவேல் தனக்கு சாதகமாக பேசுவதற்காக தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 25 க்கும் மேற்பட்டோரை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். இதனால் பயந்த பிரபு தனது சித்தப்பா வீட்டிற்கு பாதுகாப்பு கேட்டு சென்றுள்ளார், சிறிது நேரத்தில் அங்கு தனது ஆட்களுடன் சென்ற சக்திவேல் அவரது சித்தப்பா சம்பத்(50), அவருடைய மகன்கள் உமாபதி(28), விக்னேஷ்(26),பூபதி(24) ஆகியோரை பிரபு மீது தாக்குதல் நடத்த தடையாக இருந்தனர் என்பதற்காக தாக்கி காயப்படுத்தியுள்ளார். 

Admin

சம்பத் மற்றும் அவரது குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்த அக்கம் பக்கத்தினர் சம்பத் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சக்திவேல் தரப்பினரிடம் இருந்து காப்பாற்றி தாக்கியவர்களில் மூன்று பேரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சக்திவேல் மற்றும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றவர்களை தேடிவருகின்றனர். 

Admin

மேலும் காயமடைந்த சம்பத் மற்றும் அவர்களது குடும்பத்தினரை மிட்ட போலீசார் அவர்களை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அண்ணனின் மனைவியுடன் தம்பி தகாத உறவு வைத்துக்கொண்டு தனியாக குடும்பம் நடத்தியது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Admin

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com