

ஆந்திர மாநிலம், விஜய நகரம் மாவட்டத்தை சேர்ந்த கரிவிடி பகுதியை பகுதியை சேர்ந்தவர் 40 வயதுடைய நாகராஜு. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரம்யா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் மூன்று குழந்தைகள் உள்ளனர். மூன்று வருடத்திற்கு முன்பு இவர்கள் விசாகப்பட்டினம் பகுதிக்கு குடிபெயர்ந்த நிலையில் நாகராஜு அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வந்தார்.
ரம்யா குழந்தைகளை பார்த்து கொண்டு வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வசந்த் ராவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களை பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்திருக்கின்றனர். மேலும் தனியாக வீடு எடுத்து நாகராஜு வேலைக்கு சென்ற பின் வசந்த் ராவுடன் ரம்யா குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த கணவர் நாகராஜு மனைவியை சரமாரியாக அடித்து கள்ளக்காதலை கைவிடுமாறு வற்புறுத்தி வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ரம்யா நாகராஜூவை கொன்று விட்டு காதலை வசந்த் ராவுடன் வாழ முடிவு செய்திருக்கிறார். அதன்படி பாலகிருஷ்ணன் மற்றும் பாண்டு ஆகியவர்களிடம் 50 ஆயிரம் கொடுத்து நாகராஜூவை கொலை செய்ய கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் வேலைக்கு சென்ற நகராஜூவை வழிமறித்த வசந்த் ராவ், பாலகிருஷ்ணா மற்றும் பாண்டு ஆகிய மூவரும் அவரை அடித்து கொலை செய்திருக்கின்றனர்.
பின்னர் உடலை திம்மாபுரம் காட்டு பகுதிக்கு எடுத்து சென்று உடலை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டு தப்பி சென்றனர். இதனை தொடர்ந்து தனது மகனை காணவில்லை என நாகராஜுவின் தந்தை புகாரளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது திம்மாபுரம் பகுதியில் ஒரு சடலம் பாதி எரிந்த அழுகிய நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அது தேடப்படும் நாகராஜுவின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து நகராஜு மனைவியின் செல்போனை கைப்பற்றி பரிசோதனை செய்ததில் அவர் வசந்த் ராவுடன் அடிக்கடி பேசியதும் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதும் தெரியவந்தது.எனவே இருவரையும் கைது செய்து விசாரணை செய்ததில் பாலகிருஷ்ணன் மற்றும் பாண்டு உதவியுடன் நகராஜூவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கின்றனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.