“கள்ளக்காதலை அறிந்ததால் கணவர் கொலை” - இறுதி சடங்கு செய்து உடலை புதைத்த மனைவி… இஸ்ரேலில் இருந்து வந்த ஃபோனால் வெளியான உண்மை!

கள்ளக் காதலன் திலீப்பை பாதுகாப்பாக அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு...
“கள்ளக்காதலை அறிந்ததால் கணவர் கொலை” - இறுதி சடங்கு செய்து உடலை புதைத்த மனைவி… இஸ்ரேலில் இருந்து வந்த ஃபோனால் வெளியான உண்மை!
Published on
Updated on
2 min read

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், மட்லுர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சௌமியா என்பவருடன் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரமேஷ் மாரடைப்பால் இருந்து விட்டதாக கூறி அதிகாலையிலேயே அவரது மனைவி அவசர அவசரமாக இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இதனை அறிந்து அக்கம் பக்கத்தினர் ரமேஷின் உடலை பார்த்த போது அவரது கழுத்தில் காயங்கள் இருந்திருக்கிறது. எனவே இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் இஸ்ரேலில் இருக்கும் ரமேஷின் சகோதரருக்கு போன் செய்து தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர் நிஜாமாபாத் காவல் நிலையத்திற்கு போன் செய்து தனது அண்ணனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் சௌமியா இறுதி சடங்குகளை முடித்து அவரது கணவர் உடலை புதைத்திருக்கிறார்.

எனவே போலீசார் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்லுரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்த சௌமியர்க்கு அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த 25 வயதுடைய திலீப் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்திருக்கின்றனர். இதனை அறிந்த ரமேஷ் மனைவி சௌமியா மற்றும் அவரது காதலனை கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சௌமிய மற்றும் அவரது காதலன் ரமேஷை கொலை செய்ய திட்டம் தீட்டி சௌமியா தனது மோதிரத்தை விற்று திலீப்பிடம் 35 ஆயிரம் பணம் கொடுத்திருக்கிறார். அந்த பணத்தை ரமேஷை கொலை செய்வதற்காக திலீப் கூலிப்படைக்கு கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரமேஷ் வேலைக்கு சென்ற நிலையில் சௌமிய தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்திருக்கிறார். ஆனால் ஏற்கனவே மனைவி மீது சந்தேகத்தில் இருந்த ரமேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டிற்கு அருகில் மறைந்திருந்து பார்த்த போது திலீப் வீட்டிற்கு வருவதை கண்டு ஆத்திரமடைந்திருக்கிறார். பின்னர் வீட்டிற்கு சென்ற ரமேஷ் அவர்களிடம் வாக்குவாதம் செய்த நிலையில் ஆத்திரமடைந்த சௌமிய அவரது காதலனுடன் சேர்ந்து கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்.

மேலும் காதலன் திலீப்பை பாதுகாப்பாக அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு கணவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறி நாடகமாடி இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் சௌமியா, திலீப் மற்றும் கூலிப்படையை சேர்ந்த மூவரையும் கைது செய்து சிறையில் அடைந்திருக்கின்றனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவரை கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com