“ஓராண்டிற்கு முன் ஊரைவிட்டு ஓடிய கள்ளக்காதல் ஜோடி” - நடுக்காட்டில் வீசிய துர்நாற்றம்.. அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிய சடலங்கள்!

இன்று சின்னமனக்குடியை ஒட்டி உள்ள காட்டு பகுதியில் இருவரும் தூக்கில் தொங்கியபடி....
“ஓராண்டிற்கு முன் ஊரைவிட்டு ஓடிய கள்ளக்காதல் ஜோடி” - நடுக்காட்டில் வீசிய துர்நாற்றம்.. அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிய சடலங்கள்!
Admin
Published on
Updated on
2 min read

அரியலூர் மாவட்டம், சின்னமனக்குடியை சேர்ந்தவர் 35 வயதுடைய விஜய். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். விஜய் தனியார் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில் நுரையூர் கிராமத்தை சேர்ந்த 35 வயதுடைய தேவி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுகடம்பூரை சொந்த ஊராக கொண்ட தேவிக்கு சின்ன மக்குடியை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தனது கணவர் வீட்டில் இருந்து தாய் வீட்டிற்கு பேருந்தில் சென்று வரும்போது விஜயுடன் தேவிக்கு பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர். இதனை அறிந்த அவர்களது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் இருவரையும் கூப்பிட்டு கண்டித்துள்ளனர். எனவே விஜய், தேவி ஆகிய இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு ஓடிவிட்டதாக சொல்லப்படுகிறது.

Admin

இதனால் இரு குடும்பத்தினரும் விஜய் மற்றும் தேவியை தேடி கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு இருவரையும் விசாரித்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி விஜய்யையும் தேவியையும் தனித்தனியாக பிரித்து அவர் அவர் குடும்பத்துடன் அனுப்பி வை திருக்கின்றனர். இருப்பினும் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் மீண்டும் இருவரும் கடந்த எட்டு மாதங்களுக்கு ஊரை விட்டு சென்றிருக்கின்றனர். எனவே இரு குடும்பத்தினரும் அவர்களை தேடி வீட்டிற்கு அழைத்து வரும் முயற்சியை கைவிட்டனர்.

இந்நிலையில் இன்று சின்னமனக்குடியை ஒட்டி உள்ள காட்டு பகுதியில் இருவரும் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதிக்கு மாடுகளை ஓட்டிச் சென்றவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பா. சாஸ்திரி நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதில் இருவரும் சில தினங்களுக்கு முன்பே தூக்கு மாட்டி இருந்திருக்கலாம் என்றும், உடல்கள் உருமாறிய நிலையில் உள்ளதும் கண்டறியப்பட்டது. தகாத உறவால் தங்களது இரு குடும்பத்தினரையும் தவிக்க விட்டு விட்டு சென்ற ஜோடிகள் இருவரும், மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com