

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் 49 வயதுடைய பரசுராமன். இவர் தனது தோட்டத்தில் முந்திரி விளைச்சல் செய்து வியாபாரம் நடத்தி வரும் நிலையில் இவரது தோட்டத்தில் இருந்து முந்திரி கொட்டைகளை எடுத்துச் செல்வதற்கு சிரமமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே சுலபமாக எடுத்து செல்வதற்கு தனது உறவினரான இளங்கோவன் நிலத்தில் சாலையை சீரமைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்.
எனவே இளங்கோவன் மற்றும் பரசுராமன் இருவருக்கும் இடையே நில பிரச்சனை காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது. மேலும் இளங்கோவன் பரசுராமன் சீரமைத்த சாலையை பயன்படுத்த விடாமல் தடுத்து வந்திருக்கிறார். எனவே மிகுந்த ஆத்திரமடைந்த பரசுராமன் தனது அண்ணனை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இருவரும் மாறி அடித்துக் கொண்டு சண்டை போட்டிருக்கின்றனர். இவர்களின் சத்தம் கேட்டு பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த 60 வயதுடைய மணிமேகலை அவர்களது வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
அப்போது பரசுராமனுக்கும் இளங்கோவனுக்கும் மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டதை பார்த்த மணிமேகலை இருவரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்து விலக்கி விட அருகில் சென்ற நிலையில் எதிர் பாரத விதமாக தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மயங்கிய மணிமேகலையை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.
உயிரிழந்த மணிமேகலைக்கு சிவகுமார் என்பவருடன் திருமணமாகி இரண்டு மகன்களுடன் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சண்டையின் போது பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து உண்மையிலேயே மணிமேகலை எதிர்பாராத விதமாக தான் கீழே வில்லுத்தாரா அல்லது திட்டமிட்டு தள்ளிவிடப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.