"செவிலியர் தொழில் பாலியல் ரீதியாக பார்க்கப்படுகிறது".. சீருடையில் காலனி ஆதிக்கம் - இந்திய பாணியில் மாற்ற சொல்லும் கங்கனா ரனாவத்

இது மிகவும் பாலியல் ரீதியாகப் பார்க்கப்படும் ஒரு தொழில். ஹாலோவீன் அன்று மக்கள் செவிலியர் போல வேடமிட்டு, அவர்களைப் பற்றி கேலி செய்கிறார்கள்.
Kangana Ranaut
Kangana RanautKangana Ranaut
Published on
Updated on
2 min read

கடந்த வாரம், கங்கனா ரனாவத், மனோஜ் தபாடியாவின் இயக்கத்தில் உருவாகும் ' பாரத் பாக்ய வித்தாத்தா' என்ற வரலாற்றுப் பின்னணி கொண்ட குற்றத் திரில்லர் திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டார். 2008-ம் ஆண்டு நடந்த 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களின் தாக்குதலின் போது காமா மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர்கள் நூற்றுக்கணக்கான நோயாளிகளைக் காப்பாற்றிய மருத்துவமனை ஊழியர்களின் உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான த்ரில்லர் திரைப்படமாகும். இதில் கங்கனா ரனாவத் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோதிலும், மருத்துவமனையைச் செயல்பட வைப்பதிலும் நோயாளிகளைப் பாதுகாப்பதிலும் செவிலியர்களின் பங்களிப்பு எவ்வளவு மதிப்புமிக்கதாக இருந்தது என்பதை இப்படம் காட்டுகிறது. ஒரு செவிலியராக நடித்த கங்கனா, அது ஒரு எளிதான தொழில் அல்ல என்றும், ஊதியக் கட்டமைப்பு முதல் சீருடை வரை பல சீர்திருத்தங்கள் தேவை என்றும் பேசியுள்ளார். இது குறித்து பேசிய கங்கனா, "அவர்களின் வாழ்க்கையை விட, அவர்களைப் பற்றிய மக்களின் எண்ணங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். இது மிகவும் பாலியல் ரீதியாகப் பார்க்கப்படும் ஒரு தொழில். ஹாலோவீன் அன்று மக்கள் செவிலியர் போல வேடமிட்டு, அவர்களைப் பற்றி கேலி செய்கிறார்கள். அவர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது, அதிக வேலைப்பளு உள்ளது, மேலும் அவர்கள் பாலியல் ரீதியாகப் பார்க்கப்படுகிறார்கள்," என்று கங்கனா பேசினார்.

“எங்கள் திரைப்படத்தில், இரண்டு பேர் செவிலியரைப் பார்த்து, ' நேரம் கிடைத்தால் இரண்டு நான்கு விஷயங்களையும் செய்துவிடுங்கள் ' என்று சொல்லும் ஒரு வசனம் இருந்தது. நேரக் கட்டுப்பாடுகள் காரணமாக அந்த வசனத்தை எங்களால் சேர்க்க முடியவில்லை. ஆனால் அதுதான் யதார்த்தம். செவிலியர்களுக்கு உரிய மரியாதையை நாம் கொடுப்பதில்லை. காவலாளிகள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களின் விஷயத்திலும் இதே நிலைதான். அவர்கள் நோயாளிகளைச் சுத்தம் செய்கிறார்கள். அது மிகவும் முக்கியமான ஒரு பணி. ஆனால் அவர்கள் கவனிக்கப்படுகிறார்களே தவிர, ஒருபோதும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை,” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய கங்கனா, செவிலியர்களின் சீருடையில் இன்னும் காலனித்துவத்தின் தாக்கம் இருப்பதால், இந்த பாலியல்மயமாக்கலுக்கு அதுவும் ஒரு காரணம் என்று கங்கனா ரனாவத் கருதுவதாக அவர் கூறியுள்ளார். “செவிலியர்களுக்கான ஆடை விதிமுறை பிரிட்டிஷ் காலத்திலிருந்து இருந்து வருகிறது. மருத்துவர்கள் எதை வேண்டுமானாலும் அணியலாம், அதன் மேல் அணிவதற்கு ஒரு கோட் மட்டும் கொடுத்தால் போதும். ஆனால் நமது செவிலியர்கள், வெயிலாக இருந்தாலும் சரி, குளிராக இருந்தாலும் சரி, அந்த வழக்கமான சீருடையைத்தான் அணிகிறார்கள். அது ஒரு அந்நியத் தோற்றம்,” என்று அவர் கூறினார்.

சீருடை குறிக்கும் விழுமியங்களை இழிவுபடுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் கங்கனா தெளிவுபடுத்தினார். “படத்தில் சீருடையைப் பொறுத்தவரை, நாங்கள் மிகுந்த நேர்மையுடனும் கண்ணியத்துடனும் பணியாற்றியுள்ளோம். அதன் வடிவமோ அளவோ ஒரு பொருட்டல்ல. அது உங்கள் சீருடை, அது உங்கள் கடமை. ஆனால், அதையும் மீறி, தனிப்பட்ட முறையில் அது மிகவும் பிரிட்டிஷ் தோற்றமாக இருப்பதாக நான் உணர்கிறேன். குண்டூசிகள், தொப்பிகள் மற்றும் பெல்ட்கள் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் அமெரிக்க கடற்படையால் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது,” என்று அவர் கூறினார். சீருடையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என கங்கனா அழைப்பு விடுத்திருந்தார். அது 'இந்தியமயமாக்கப்பட' வேண்டும் என அவர் கருதுவதாக கூறினார். மேலும், செவிலியர்கள் தினமும் பணியில் எத்தகைய சீருடையை அணிய விரும்புகிறார்கள் என்பது குறித்து அவர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தனது திரைப்படம் அந்தத் திசையில் சில மாற்றங்களைக் கொண்டுவரும் என்றும், இனிவரும் காலங்களில் பார்வையாளர்கள் செவிலியர்களை முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்க வைக்கும் என்றும் அவர் நம்புவதாக கூறினார்.

'பாரத் பாக்ய வித்தாத்தா' என்ற திரைப்படத்தின் தலைப்பு, கடந்த ஆண்டு இந்தியத் தொழிலாளர்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கிய சொற்றொடரால் ஈர்க்கப்பட்டது. அதுவே கங்கனா ரனாவத்தை தனது திரைப்படத்தின் பெயரை 'நர்சஸ் ஆஃப் காமா' என்பதிலிருந்து மாற்றத் தூண்டியது. இருப்பினும், அந்தத் தலைப்பு ஏற்கனவே ஜான் ஆபிரகாமின் ஜேஏ ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் பதிவு செய்யப்பட்டிருந்தது. 'ஷூட் அவுட் அட் வடலா' (2013) திரைப்படத்தில் தன்னுடன் நடித்த நடிகரிடமிருந்து அழைப்பு வந்த ஒரு நாளுக்குள், அந்தத் தலைப்பை இலவசமாக வழங்கியதற்காக டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கங்கனா ஜானுக்கு நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com