விஜய் என்ற ஒற்றை முகத்துக்கு.. 'ஜனநாயகன்' ஆடியோ லான்ச்சில் கொட்டிய பணமழை - உண்மையை உடைத்த அந்தணன்!

ஒரு முதிய பெண்மணி விஜய்யுடன் புகைப்படம் எடுக்க விரும்பியபோது, அவர் அவரிடம் நெருங்கிச் சென்று அணைத்தபடி புகைப்படம் எடுத்துக் கொண்டது....
விஜய் என்ற ஒற்றை முகத்துக்கு.. 'ஜனநாயகன்' ஆடியோ லான்ச்சில் கொட்டிய பணமழை -  உண்மையை உடைத்த அந்தணன்!
Published on
Updated on
2 min read

மலேசியாவில் நடைபெற்ற நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' பட ஆடியோ வெளியீட்டு விழா குறித்து வலைப்பேச்சு 'அந்தணன்' பேசுகையில், மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் பட ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும், விஜய்க்காகக் கூடிய இந்த மக்கள் கூட்டம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக அண்டை நாடான சிங்கப்பூரிலிருந்து மட்டும் சுமார் பத்தாயிரம் கார்களில் ரசிகர்கள் தரைவழியாகப் பயணம் செய்து மலேசியாவிற்கு வந்துள்ளனர். இந்த விழாவில் விஜய் சுமார் இருபது நிமிடங்கள் உரையாற்றினார். நள்ளிரவு 12:30 மணியளவில் அவர் பேசத் தொடங்கியபோது, அங்கிருந்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவரது பேச்சைக் கேட்டு ரசித்தனர்.

விஜய்யின் இந்த மலேசியா வருகை பெரும் வருமானத்தை ஈட்டித் தந்துள்ளது. மில்லியன் கணக்கில் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதுடன், அவர் தங்கியிருந்த ஹோட்டலிலும் பெரும் வசூல் கிடைத்துள்ளது. விஜய் தங்கியிருந்த 'ஷங்கரிலா' ஹோட்டலில் அவரை அருகிலிருந்து பார்ப்பதற்காகவே சுமார் 1500 ரசிகர்கள் தலா 2000 ரிங்கிட் செலுத்தி ஒரு தனி அரங்கில் காத்திருந்தனர். விஜய் தனது அறைக்குச் செல்லும் வழியில் அவர்களைக் கடந்து சென்றபோது அனைவரையும் நோக்கி கைகாட்டிச் சென்றார். அங்கு ஒரு முதிய பெண்மணி விஜய்யுடன் புகைப்படம் எடுக்க விரும்பியபோது, அவர் அவரிடம் நெருங்கிச் சென்று அணைத்தபடி புகைப்படம் எடுத்துக் கொண்டது மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரை நினைவூட்டுவது போல் இருந்தது.

மேடையில் விஜய் பேசியபோது சக நடிகர் அஜித்தைப் பற்றிக் குறிப்பிட்டது அங்கிருந்த ரசிகர்களிடையே பெரும் கைத்தட்டலைப் பெற்றது. மலேசியா என்றாலே தனது நண்பர் நடித்த 'பில்லா' படம் தான் நினைவுக்கு வருவதாக விஜய் கூறினார். அஜித் இந்த விழாவிற்கு வருவார் என்று பலர் எதிர்பார்த்த நிலையில், அவர் தனது கார் பந்தயம் தொடர்பான வேலைகளை முடித்துவிட்டு முன்கூட்டியே அங்கிருந்து கிளம்பிவிட்டார். இருப்பினும் விஜய் தனது நண்பர் என்று அஜித்தைக் குறிப்பிட்டது இருவருக்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்தியது. விஜய் தனது உரையில், கடந்த முப்பது ஆண்டுகளாக என்னுடன் இருந்த நீங்கள், இனிவரும் முப்பத்தி மூன்று ஆண்டுகளும் என்னுடன் இருக்கப்போகிறீர்கள் என்று அரசியலை மையப்படுத்திப் பேசினார்.

விஜய் தனது பேச்சில், போறவங்க வர்றவங்க எல்லாம் நமக்கு எதிரி கிடையாது என்று கூறியது ஒரு முக்கியமான கருத்தாகப் பார்க்கப்படுகிறது. இது நடிகர் சிவகார்த்திகேயனுக்கும், அரசியலில் விஜய்யைத் தொடர்ந்து விமர்சிப்பவர்களுக்கும் சொல்லப்பட்ட பதிலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தனது கடைசி ஆடியோ வெளியீட்டு விழா இதுதான் என்று விஜய் உணர்ச்சிகரமாகப் பேசியபோது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். அப்போது மேடையில் பேசிய நடிகர் நாசர், விஜய் சினிமாவை விட்டுப் போகக் கூடாது என்றும், அவர் பலருக்குச் செய்த ரகசிய உதவிகளைப் பற்றியும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக நாசரின் மகனை மீட்டெடுக்க விஜய் உதவியதை அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார் என்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com