உங்களை பதற வைக்கும் "Digital Arrest".. இப்படி Phone Call வந்தால் என்ன பண்ணனும்?

அதுல ட்ரக்ஸ் அல்லது சட்டவிரோத பொருட்கள் இருக்கு"னு சொல்லி, உங்களை குற்றவாளியா காட்டி பயமுறுத்துவாங்க
உங்களை பதற வைக்கும் "Digital Arrest".. இப்படி Phone Call வந்தால் என்ன பண்ணனும்?
Published on
Updated on
3 min read

இணைய உலகம் நம்ம வாழ்க்கையை எளிதாக்கியிருக்கும் அதே வேளையில், அதோடு சைபர் கிரைம்களும் அதிகமாகி இருக்கு. இதுல ஒரு புது வகை மோசடி இருக்கு, அதுக்கு பேர் "டிஜிட்டல் அரெஸ்ட்" (Digital Arrest)

டிஜிட்டல் அரெஸ்ட் என்றால் என்ன?

டிஜிட்டல் அரெஸ்ட் ஒரு ஆன்லைன் மோசடி, இதுல மோசடிக்காரங்க போலீஸ், CBI, ED, அல்லது RBI மாதிரியான அரசு அமைப்புகளோட அதிகாரிகளா நடிச்சு, உங்களை ஒரு குற்றத்துல சம்பந்தப்படுத்தி பயமுறுத்துவாங்க. இவங்க பொதுவா ஃபோன் கால், வாட்ஸ்அப், அல்லது ஸ்கைப் (Skype) மூலமா தொடர்பு கொள்றாங்க. உதாரணமா, "நீங்க ஒரு பார்சல் அனுப்பியிருக்கீங்க, அதுல ட்ரக்ஸ் அல்லது சட்டவிரோத பொருட்கள் இருக்கு"னு சொல்லி, உங்களை குற்றவாளியா காட்டி பயமுறுத்துவாங்க. சில சமயம், உங்க உறவினர் ஒரு விபத்துல அல்லது குற்றத்துல சிக்கியிருக்காங்கனு சொல்லி, பணம் கேட்பாங்க.

இவங்க போலீஸ் யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு, போலி ஆஃபீஸ் செட்டிங்கை உபயோகிச்சு, உங்களை ஸ்கைப் வீடியோ கால்ல தொடர்ந்து இருக்க சொல்லுவாங்க, இதுக்கு பேர் "டிஜிட்டல் அரெஸ்ட்". இப்படி பயமுறுத்தி, உங்க பணத்தை பறிக்கறது தான் இவங்களோட மெயின் டார்கெட்.

இந்த மோசடி எப்படி வேலை செய்யுது?

1. முதல் தொடர்பு

மோசடிக்காரங்க முதல்ல ஒரு ஃபோன் கால், வாட்ஸ்அப் மெசேஜ், அல்லது ஸ்கைப் கால் மூலமா தொடர்பு கொள்றாங்க. இவங்க உங்களை ஒரு குற்றத்தோட இணைச்சு, "நீங்க பார்சல் அனுப்பியிருக்கீங்க, அதுல ட்ரக்ஸ் இருக்கு" அல்லது "உங்க ஆதார் கார்டு ஒரு மனி லாண்டரிங் கேஸ்ல சிக்கியிருக்கு"னு பயமுறுத்துவாங்க.

இவங்க போலீஸ் யூனிஃபார்ம், அரசு ஆஃபீஸ் மாதிரியான செட்டிங், அல்லது போலி டாக்குமெண்ட்ஸை காட்டி, தங்களை உண்மையான அதிகாரிகளா நம்ப வைப்பாங்க.

2. டிஜிட்டல் அரெஸ்ட்

இவங்க உங்களை ஸ்கைப் அல்லது வேற வீடியோ கால் மூலமா தொடர்ந்து கண்காணிக்க சொல்லுவாங்க. "நீங்க வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது, கால் கட் பண்ணக் கூடாது"னு பயமுறுத்துவாங்க. இப்படி நீங்க வீடியோ கால்ல இருக்கணும்னு சொல்லி, உங்களை ஒரு மாதிரி "டிஜிட்டல் சிறையில்" வைப்பாங்க.

சில சமயம், இவங்க போலி கோர்ட் விசாரணையை நடத்துவாங்க, அதுல ஒருத்தர் நீதிபதியா நடிச்சு, உங்களை பயமுறுத்தும் கூத்தெல்லாம் நடக்கும்.

3. பணம் பறித்தல்

இவங்க உங்களை "கேஸை மூட"னு சொல்லி, பணம் கட்ட சொல்லுவாங்க. இதுக்கு "காம்ப்ரமைஸ்"னு பேர் சொல்லி, பணத்தை வேற வங்கி கணக்குக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ண சொல்லுவாங்க. சில சமயம், உங்களோட வங்கி விவரங்கள், ஆதார், அல்லது பிற தனிப்பட்ட தகவல்களை கேட்பாங்க, இதை உபயோகிச்சு மேலும் மோசடி செய்யலாம்.

மோசடிக்காரங்க உங்க பயத்தை தூண்டி, உடனடியா முடிவு எடுக்க வைக்கறாங்க. உங்க பயம் தான் அவர்களின் ஆயுதமே. "ஜெயிலுக்கு போவீங்க"னு பயமுறுத்துவாங்க, இதனால நீங்க பதறி பணம் கட்டிடுவீங்க.

சோஃபிஸ்டிகேட்டட் டெக்னாலஜி: இவங்க ஸ்கைப், வாட்ஸ்அப், அல்லது ரிமோட் ஆக்சஸ் சாஃப்ட்வேர் மாதிரியான Anydesk, TeamViewer-ஐ உபயோகிச்சு உங்களை கண்காணிக்கறாங்க.

கிராஸ்-பார்டர் கிரைம்: இந்த மோசடிகள் பெரும்பாலும் மியான்மர், லாவோஸ், கம்போடியா மாதிரியான நாடுகள்ல இருந்து நடக்குது. இதனால, இவங்களை பிடிக்கறது கஷ்டமா இருக்கு.

அனைவரையும் டார்கெட் பண்ணுது: வயசானவங்க மட்டுமல்ல, படிச்சவங்க, பெரிய பதவியில் இருக்கவங்க, கூட இந்த மோசடிக்கு பலியாகியிருக்காங்க. உதாரணமா, ஒரு பெரிய டெக்ஸ்டைல் தொழிலதிபர் 7 கோடி ரூபாயை இழந்திருக்கார்.

2024 ஜனவரி முதல் ஏப்ரல் வரை, இந்தியாவில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளால 120.30 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கு. 2024-ல 92,323 இந்த மாதிரியான மோசடி கேஸ்கள் பதிவாகியிருக்கு, இதுல மொத்த இழப்பு 2,140.99 கோடி ரூபாய். இந்த எண்ணிக்கை உண்மையை விட குறைவா இருக்கலாம், ஏன்னா பலர் இந்த மோசடியை பற்றி வெளியே சொல்ல பயப்படறாங்க.

நேஷனல் சைபர் கிரைம் ரிப்போர்டிங் போர்ட்டல் (NCRP)-ல 2024 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 7.4 லட்சம் புகார்கள் வந்திருக்கு. இதுக்கு முன்னாடி, 2023-ல மொத்தம் 15.56 லட்சம் புகார்கள் பதிவாகியிருக்கு. இந்த புள்ளிவிவரங்கள் இந்த மோசடியோட பரவலை காட்டுது.

அரசு எடுத்த நடவடிக்கைகள்

இந்திய சைபர் கிரைம் கோஆர்டினேஷன் சென்டர் (I4C), மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்து, இந்த மோசடிகளுக்கு உபயோகிக்கப்பட்ட 1,000-க்கு மேற்பட்ட ஸ்கைப் ID-களை பிளாக் பண்ணியிருக்கு.

வங்கி கணக்குகளை ஃப்ரீஸ் பண்ணல்: I4C, 4.5 லட்சம் மியூல் வங்கி கணக்குகளை ஃப்ரீஸ் பண்ணியிருக்கு, இவை மோசடி பணத்தை லாண்டர் பண்ண உபயோகிக்கப்பட்டவை.

டெலிகாம் அமைச்சகத்தோட இணைந்து, 17,000 வாட்ஸ்அப் அக்கவுண்ட்ஸை பிளாக் பண்ணியிருக்கு. I4C, Cyberdost என்ற சமூக வலைதள பக்கங்களில் இன்ஃபோகிராஃபிக்ஸ், வீடியோக்கள் மூலமா விழிப்புணர்வு ஏற்படுத்துது.

இதை எப்படி தவிர்க்கலாம்?

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் இருந்து பாதுகாக்க, இந்த எளிய வழிகளை பின்பற்றலாம்:

இந்த மோசடிக்காரங்க உங்க பயத்தை உபயோகிக்கறாங்க. ஒரு கால் வந்து, "நீங்க குற்றத்துல சிக்கியிருக்கீங்க"னு சொன்னா, பதறாம, அமைதியா இருக்கவும். எந்த அரசு அதிகாரியும் ஃபோன் அல்லது வீடியோ கால் மூலமா அரெஸ்ட் பண்ண மாட்டாங்க.

கால்/வீடியோவை ரெகார்ட் பண்ணவும்

முடிஞ்சா, காலை ரெகார்ட் பண்ணவும், அல்லது ஸ்க்ரீன் ஷாட் எடுக்கவும். இது பின்னாடி புகார் கொடுக்க உதவும்.

இந்த மாதிரி கால் வந்த உடனே, 1930 என்ற சைபர் கிரைம் ஹெல்ப்லைன் நம்பருக்கு ஃபோன் பண்ணவும், அல்லது www.cybercrime.gov.in-ல ஆன்லைன்ல புகார் கொடுக்கவும். உள்ளூர் போலீஸையும் தொடர்பு கொள்ளவும். முதல் 24 மணி நேரம் (கோல்டன் அவர்) ரொம்ப முக்கியம், இதுல புகார் கொடுத்தா, பணத்தை மீட்க வாய்ப்பு இருக்கு.

மிக முக்கியமாக ஆதார், வங்கி கணக்கு விவரங்கள், அல்லது பாஸ்வர்டை எந்த காரணத்துக்காகவும் ஷேர் பண்ண வேண்டாம். உண்மையான அதிகாரிகள் இப்படி கேட்க மாட்டாங்க.

குறிப்பா, மோசடிக்காரர்களிடம் "நோட்டிஸ் ஆஃப் அபியரன்ஸ்" (Notice of Appearance) கேட்கவும். CrPC செக்ஷன் 41A படி, எந்த போலீஸும் இப்படி ஒரு நோட்டிஸ் இல்லாம அரெஸ்ட் பண்ண முடியாது.

இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றி, நம்மளையும், நம்மோட அன்புக்குரியவங்களையும் பாதுகாக்கலாம். ஸோ, இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அதிகம் ஷேர் பண்ணுங்க.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com