“அதிமுக வாக்குகளை குறிவைத்த விஜய்..” NDA -க்கு நெருக்கடிதான் பாஸ்..! ஆமா அந்த 3 பேரும் எங்க போவாங்க!?

விஜய் -க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த 2026 தேர்தல் திமுக வேண்டுமா? வேண்டாமா? என்பது...
admk vs tvk
admk vs tvk
Published on
Updated on
3 min read

2026 தேர்தலுக்குள் தமிழகத்தின் நிலையே தலைகீழாக மாறிவிடும் என்பதில் சிறு மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஜனவரிக்கு பிறகுதான் கட்சிகளின் கூட்டணி குறித்து ஒரு தெளிவான நிலைப்பாடு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை தனித்துவமாகியதில் விஜய் -க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த 2026 தேர்தல் திமுக வேண்டுமா? வேண்டாமா? என்பது மட்டும்தான். தேர்வுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், திமுக -விற்கு சாதகமாகவே அமைந்தாலும், விஜய் 20% வாக்குகளை நிச்சயம் உடைப்பார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

இந்த சூழலில் கரூர்  சம்பவத்திற்கு பிறகு,  விஜய் -க்கு மக்கள் சந்திப்பிற்கான அனுமதி கிடைக்கப்பெறவில்லை, மேலும் கடந்த 2 மாதங்களாக தமிழக வெற்றிக்கழகமே ‘silent Mode’ -ல் தான் இருந்தது. இந்த சூழலில்தான், கடந்த வாரத்திலிருந்து விஜய் மக்களை சந்திக்க துங்கியுள்ளார், மேலும் மக்கள் சந்திப்பிலும் அவருக்கு ரோட் ஷோ -க்கு அனுமதி கிடையாது. பாண்டிச்சேரியை அடுத்து, ஈரோட்டிலும் நேற்றைய தினம் அவர் திறந்தவெளி மக்கள் சந்திப்பை மேற்கொண்டார். 

ஈரோடு விஜய் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் தீவிரமாக மேற்கொண்டார். அதிமுகவிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு தனது பகுதியில் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் அவர் ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக செய்திருந்தார். 

விஜய்யின் பேச்சு!

இந்த சூழலில்தான் நேற்றைய தினம் விஜய் பேசிய பேச்சுக்கள், மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன, 

“ஈரோடு சிங்கம், சீர்திருத்த நெம்புகோல் நமது வழிகாட்டி, பெரியார் பற்றி பேசாமல் இருக்க முடியுமா? அப்போ அண்ணாவும் எம்.ஜி.ஆர் -ம் யாரு.. ?  பெரியாரை பின் தொடர்ந்த அண்ணாவிடம் இருந்தும், எம்.ஜி.ஆர் -இடம் இருந்தும், தேர்தல் அணுகுமுறையை எடுத்துக்கொண்டோம். இவர்கள் தமிழ்நாட்டின் சொத்து, அண்ணா, பெரியார், எம்,ஜிஆர் -ஐ தனிப்பட்ட கட்சிகள் சொந்தம் கொண்டாட முடியாது. அதனால நாங்க ஒரு வழியில் அரசியல் பண்ணிட்டு போய்ட்டு இருக்கோம், உங்களுக்கு தான் TVK  -ஒரு பொருட்டே இல்லைல.. அப்புறம் ஏன் எங்கள பத்தி பேசுறீங்க..? ஆளாளுக்கு போய் புலம்பி தள்ளுறீங்க … இது எப்படி இருக்கு தெரியுமா? எனக்கு பயம் இல்ல.. எனக்கு பயம் இல்ல… அப்டினு சொல்லிட்டே பயப்படுறீங்க..” என திமுக -வை கடுமையாக சாடியதோடு திமுக -விற்கு எதிரானவர்கள் தமிழக வெட்டி கழகம் என்பது போல பேசியிருந்தார். 

திமுக -தீய சக்தி!

தொடர்ந்து பேசிய அவர் “நாம் எதிரிகள் யாருனு சொல்லிட்டுதான் களத்துக்கு வந்திருக்கோம்,  களத்துல  இருக்கவங்களைத்தான் எதிர்ப்போம்.  சும்மா களத்துல இல்லாதவங்களையும், களத்துக்கும் அவங்களுக்கும் சம்மந்தமே இல்லாதவங்களையும் எதிர்க்கிற ஐடியா இல்ல பாஸ்… நீங்க கேக்குறீங்கன்னுலாம் எதிர்க்க முடியாது. எங்களுக்கு நெறைய வேல இருக்கு..

எத்தனை எத்தனை பொய் வாக்குறுதிகள், நீட்டை ஒழிப்போம், சிலிண்டருக்கு மானியம் தருவோம் என சொன்னார்களே செய்தார்களா!?” என ஜெயலலிதா பாணியில் பேசியிருந்தார். 

மேலும், “இவங்க எப்பவுமே இப்படித்தான் சொன்னதை செய்ததே இல்ல.. திமுக -வும் பிரச்சனைகளும் ஃபெவிக்கால் போட்டு ஓட்டுனமாதிரி, பிரிக்கவே முடியாது.” என பேசியிருந்தார்.

தொடர்ந்து ஈரோட்டில் உள்ள கரும்பு, நெல் கொள்முதல் பிரச்சனைகள் என உள்ளூர் பிரச்னைகள் குறித்தும் பேசியிருந்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “வாக்குறுதி நம்பர் 103, பவானி - நொய்யல் - அமராவதி இணைப்பு திட்டம், சொன்னார்களே.. செய்தார்களா?  மக்கள் பிரச்சனை எதையுமே சரி செய்யாமல் மாடல் அரசு, மாடல் அரசு என்கிறீர்களே கூச்சமா இல்லை…

இந்த பிரச்சனை எல்லாம் விட்டுவிட்டு, நா எத்தன நிமிஷம் பேசுறன்னு, ஏன் பாக்குறீங்க சார். அத விட்டுட்டு தனிப்பட்ட முறையில், தரக்குறைவா பேசுறீங்க.. எனக்கு அத விட மோசமா பேச அவரும். ஆனா வேண்டாம்னு இருக்கேன்..”

காஞ்சிபுரத்துல நா பேசினதா தப்பு தப்பா புரிஞ்சிகிட்டு பிரச்சாரம் பண்றீங்க, “நா இப்போ சொல்றேன், நா இலவசங்களுக்கு எதிரானவன் இல்ல, மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கு பண்ற நலத்திட்டங்கள, ஓசி, ஓசி, னு சொல்லி அசிங்கப்படுத்துனா, அத கேட்டுட்டு நா சும்மா இருக்க மாட்ட,” நா மக்கள் பக்கம்தான் மக்களும் என் பக்கம்தான். 

பலமுறை ஜெயலலிதா மேடமும், எம்.ஜி.ஆர் -ம்  ‘திமுக -ஒரு தீய சக்தி’ னு சொல்லி கேட்டிருக்கேன். அப்போல்லாம் யோசிச்சதுண்டு, ஏன் இவ்வளவு கோவமா பேசுறாங்கனு, இப்போல புரியுது.. அனா இப்போ சொல்றேன் ‘திமுக ஒரு தீய சக்தி, தீய சக்தி, தீய சக்தி..” அதை எதிர்க்க வந்த நாம் தூய சக்தி” என பேசியிருந்தார். 

ஜெயலலிதா தனது பரப்புரைகளில் அதிகமாக பயன்படுத்திய சொற்பதம் “திமுக ஒரு தீய சக்தி” இதையே விஜயும் இன்று கையிலெடுத்திருப்பது கவனிக்கக்கக்து .

மேலும், விஜய் இம்முறை கடுமையாக திமுக -வை சாடியிருந்தார், மேலும் பாஜக -வை  பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் திமுக -விற்கு பெரும் அச்சுறுத்தலாக விஜய் உருவெடுத்திருந்தாலும் இதுவரை எப்போதுமே செய்யாத ஒரு காரியத்தை விஜய் செய்திருக்கிறார். கடந்த எந்த கூட்டத்திலும் விஜய் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் இம்முறை ஜெயலலிதா -வின் பெயரை குறிப்பிட்டு, அவரின் மிகவும் பிரபலமான “திமுக ஒரு ஒரு தீய சக்தி, சொன்னீர்களே? செய்தீர்களா?” உள்ளிட்ட சொற்பதங்களை கையிலெடுத்து உள்ளார்.

ஏற்கனவே அதிமுக வலுவிழந்து உள்ளது. கட்சியின் மூத்த நபரான செங்கோட்டையனும் விஜயுடன் சென்றுவிட்டார்,  ஆரம்பத்திலிருந்தே விஜய் அதிமுக -வாக்குகளை விழுங்குவார் என சொல்லப்பட்டு வந்தது.  ஆனால், தற்போது எம்.ஜி.ஆர், அண்ணா, ஜெயலலிதா ஆகியோரை தமிழகத்தின் சொத்து யாரும் சொந்தம் கொண்டாட முடியாது எனக்கூறி அதிமுக -வின் மாற்றாக விஜய் வளருகிறாரோ என தோன்றுவதாக சில விமர்சகர்கள் தெரிவித்து உள்ளனர்.

அந்த மூன்று பேர்!

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகான அதிமுக பலவீனமானது என்பதை தமிழ்நாடு நன்கு அறிந்த ஒன்று. அந்த கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல்களை சமாளிப்பதற்குள்ளாகவே வருடங்கள் ஓடிவிட்டன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே கருத்து வேறுபாடு இருந்த நிலையில் அன்னூரில் நடைபெற்ற அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு போராட்ட குழுவினரால் பாராட்டு விழா நடைபெற்றபோது மோதல் வெளிப்படையானது. 

அதன் பிறகு தேவர் குருபூஜையில் டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, காரில் சென்றதை பார்த்தபிறகு எடப்பாடி செங்கோட்டையனையும் கட்சியை விட்டே நீக்கியிருந்தார், இந்த சூழலில்தான் “ஓபிஎஸ், டிடிவி, சசிகலா” ஆகியோரும் தவெக -வில் இணைவர் என சொல்லப்பட்டது. ஆனால் அவர்கள் போகவில்லை. விஜயின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு எடப்படிக்குதான் இழுபறி என்றாலும். எடப்பாடியை வீழ்த்தி கட்சியை பிடிக்கவேண்டும் என்றாவது இவர்கள் மூவரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார்கள் என சொல்லப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com