"என்ன விட்டுட்டு அவ கூட போயிருவியா?.." காதலியின் 13 வயது மகளை சீரழித்த காதலன்! பல ஆண்டுகளாக தொடர்ந்த கொடூரம் - கொலையில் முடிந்தது எப்படி?

தாயுடன் உறவில் இருந்த ஸ்டெர்ன்ஸ், சிறுமியை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
Madeleine Soto murder case
Madeleine Soto murder caseMadeleine Soto murder case
Published on
Updated on
2 min read

ஃப்ளோரிடாவில் 13 வயது சிறுமி மேட்லைன் சோட்டோ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்டீபன் ஸ்டெர்ன்ஸ், சிறையில் இருந்து பேசிய தொலைபேசி உரையாடல்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த உரையாடல்களில், சம்பவம் நடந்தபோது தான் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும், உடனடியாக 911-க்கு அழைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருப்பது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

38 வயதான ஸ்டீபன் ஸ்டெர்ன்ஸ் சிறையில் இருந்து மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருந்தன. அந்த உரையாடலில், "நான் செய்த எதையும் பகுத்தறிவுடன் செய்யவில்லை. அந்த நேரத்தில் என் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன். ஆரம்பத்திலேயே கீழே ஓடிச் சென்று அவளை எழுப்பி, 911-க்கு அழைத்திருக்க வேண்டும்," என்று ஸ்டெர்ன்ஸ் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவரது தாய், "அப்படிச் செய்திருந்தால் ஒருவேளை அவளைக் காப்பாற்றியிருக்கலாம்," என்று பதிலளித்துள்ளார்.

13 வயதான மேட்லைன் சோட்டோ, 2024-ம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி பள்ளிக்கு வராததைத் தொடர்ந்து, அவரது ஆர்லாண்டோ நடுநிலைப் பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் அளித்தது. இதையடுத்து, அவர் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நான்கு நாட்களுக்குப் பிறகு, ஓசியோலா கவுன்டியில் உள்ள வனப்பகுதியில், அவர் காணாமல் போவதற்கு முன்பு அணிந்திருந்த ஆடைகளை ஒத்த உடையுடன் அவரது சடலம் மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையில், மேட்லைனைக் கடைசியாக உயிருடன் பார்த்தவர் ஸ்டீபன் ஸ்டெர்ன்ஸ்தான் என்பது உறுதியானது. மேட்லைனின் தாயுடன் உறவில் இருந்த ஸ்டெர்ன்ஸ், சிறுமியை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மேலும், பல ஆண்டுகளாக அந்தச் சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு தொலைபேசி உரையாடலில், ஸ்டெர்ன்ஸின் கைப்பேசியில் இருந்து மீட்கப்பட்ட மேட்லைனின் பாலியல் ரீதியான புகைப்படங்கள் குறித்து அவரது தாய் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலளித்த ஸ்டெர்ன்ஸ், மேட்லைனுக்கு தன் மீது ஒருவித ஈர்ப்பு இருந்ததாகவும், அதைப் பற்றி அவரது தாய் ஜெனிஃபர் சோட்டோவுக்கும் தெரிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

"அப்படியானால், உன்னுடன் உறங்குவதற்காக அவளை ஏன் அங்கே அனுப்பினார்?" என்று ஸ்டெர்ன்ஸின் தாய் கேட்டதாக கூறப்படுகிறது. ஸ்டெர்ன்ஸ், ஜெனிஃபர் சோட்டோ மற்றும் மேட்லைன் ஆகியோர் பலமுறை ஒரே படுக்கையில் உறங்கியுள்ளனர். 'என் மகள் பெரியவளானதும் நீ அவளுடன் போய்விடக் கூடாது' என்று நகைச்சுவையாகப் பேசியுள்ளார்," என்று ஸ்டெர்ன்ஸ் அந்த உரையாடலில் கூறியுள்ளார். எனினும், மேட்லைனின் தாயான ஜெனிஃபர் சோட்டோ மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.

பல மணிநேர தொலைபேசி உரையாடல்களிலும், மேட்லைனைக் கொலை செய்ததை ஸ்டெர்ன்ஸ் நேரடியாக ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக, "எல்லாம் முடிந்த பிறகுதான் அவளை அந்த நிலையில் கண்டேன். அவள் இறந்துவிட்டாள் என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை. நான் இரவு முழுவதும் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தேன். முழு நேரமும் அந்த அறையில் இல்லை," என்று அவர் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் தனக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, "நீ இதற்கெல்லாம் பலிகடாவாகப் போகிறாயா? இதுதான் உண்மையா?" என்று அவரது தந்தை கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ஸ்டெர்ன்ஸ், தன் வாழ்நாள் முழுவதையும் யாரும் அக்கறை காட்டாத இடத்தில் கழிக்க நேரிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு அவரது தந்தை, "இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். நீ சம்பந்தப்படவில்லை என்றால் அதையும் நிரூபிக்க வேண்டும். உனக்காக இல்லாவிட்டாலும், அந்தக் குடும்பத்திற்காகவாவது உண்மை வெளிவர வேண்டும்," என்று கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த ஸ்டெர்ன்ஸ், "இது அனைத்தும் ஒரு விபத்துதான் என்று நான் நினைக்கிறேன். ஒருவரை மட்டும் குறை சொல்ல முடியுமா? என்று தெரியவில்லை. ஒருவேளை யாருக்கும் முழுக் குற்றமில்லை, அல்லது இதில் எல்லோருக்கும் ஓரளவு பங்கு இருக்கலாம்," என்று தெரிவித்துள்ளார்.

ஸ்டீபன் ஸ்டெர்ன்ஸ் மீது கொலை மற்றும் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கொலை வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com