"2 ஆண்டுகளாக 6 வயது சிறுமியை சீரழித்த பள்ளி மாணவன்!" பெற்றோர் மீதே வழக்குப்பதிவு செய்த பள்ளி நிர்வாகம் - 'மூர்க்கத்தனமாக' வாதத்தை முன்வைத்த கொடுமை

பாதிக்கப்பட்ட சிறு குழந்தைக்கு மீண்டும் மீண்டும் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகள், கடுமையான தலைவலி மற்றும் வயிற்று வலிகள் ஏற்பட்டுள்ளது.
6-year-old abuse allegation
6-year-old abuse allegation6-year-old abuse allegation
Published on
Updated on
2 min read

அதிக கட்டணம் வசூலிக்கும் புளோரிடாவில் உள்ள கிறிஸ்தவப் பள்ளியில் 6 வயது சிறுமி ஒருவர் மற்றொரு மாணவரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அந்த பள்ளி சிறுமியை வெளியேற்றியதுடன், அந்தச் சிறுமியின் குடும்பத்தின் மீது ஈவிரக்கமற்ற ஒரு வழக்கையும் தொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டு மைதானத்தில் பள்ளி இடைவேளை நேரத்தின் போது இரண்டு ஆண்டுகளாக முத்தமிடப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தங்கள் மகளைப் பாதுகாக்கத் தவறியதற்காக, செலிப்ரேஷனில் உள்ள கிரியேஷன் வில்லேஜ் வேர்ல்ட் பள்ளி மீது அந்த மழலையர் பள்ளி மாணவியின் பெற்றோர் மீதே வழக்குத் தொடுத்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட அந்த வழக்கில், மற்றொரு மாணவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தலால், பாதிக்கப்பட்ட சிறு குழந்தைக்கு மீண்டும் மீண்டும் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகள், கடுமையான தலைவலி மற்றும் வயிற்று வலிகள் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆண்டுக்கு 14,000 டாலர் கட்டணம் செலுத்தும் பள்ளிக்குச் செல்ல அந்த சிறு குழந்தை விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது.

இது குறித்து அந்த குழந்தையின் தந்தை, “என் மனைவி கிட்டத்தட்ட ஒரு வருடமாக ஒவ்வொரு வாரமும் மருத்துவரிடம் சென்று கொண்டிருந்தார். அது என்னவென்று கண்டுபிடிக்கவும், மருந்தை முயற்சி செய்து பார்க்கலாம் என்றும் நாங்கள் தொடர்ந்து முயன்றுகொண்டிருந்தோம்,” என்று அந்தச் சிறுமியின் கவலையடைந்த தந்தை கூறினார். அவர்கள், 'ஒன்றும் இல்லை' என்று சொல்லி அவளை வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். ஒரு வாரம் கழித்து, அவள், 'மீண்டும் வலிக்கிறது' என்பாள். அவளுக்குப் புற்றுநோயோ அல்லது மூளைக் கட்டியோ இருப்பதாக நாங்கள் நினைத்தோம் என்று அந்த சிறுமியின் தந்தை கூறினார்.

இறுதியில் அந்தச் சிறுமி, நோய்த்தொற்றுகளுக்கு என்ன காரணம் என்பதைத் தன் பெற்றோரிடம் தெரிவித்தபோது, ​​மன உளைச்சலுக்கு ஆளான அச்சிறுமியின் பெற்றோர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தங்கள் கவலைகளைப் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.

அடுத்த மாதம், அவர்களுடைய மகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த மே மாதம் அந்தக் குடும்பத்தின் மீது எதிர் வழக்கு அந்த பள்ளியின் சார்பில் தொடரப்பட்டுள்ளது. அந்த ஆடம்பரப் பள்ளி, மாணவியின் பெற்றோர் “பொய்யான மற்றும் தவறாக வழிநடத்தும்” குற்றச்சாட்டுகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியதுடன், மாணவர்களுக்கு இடையேயான எந்தவொரு பாலியல் தொடர்பும் “தற்செயலாக மட்டுமே நிகழ்ந்தது” என்றும், குற்றம் சாட்டப்பட்ட குழந்தைக்கு “பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதற்கான வளர்ச்சித் திறன் இல்லை” என்றும் மூர்க்கத்தனமாக வாதிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அந்த சிறுமியை கவனிக்க தவறியதாகவும், அவர்கள் அந்த குழந்தைக்கு முறையான சுகாதாரம் மற்றும் கழிவறைப் பழக்கங்களைக் கற்பிக்கத் தவறியதால், குழந்தைக்குத் தொடர்ச்சியான சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகள் ஏற்பட்டன என்றும் பள்ளி நிர்வாகம் மேலும் கூறியதாக அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குற்றச்சாட்டுகள் தங்களது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததோடு, தங்களைப் பொது அவமானத்திற்கும் உள்ளாக்கியதாக அந்தத் தனியார் பள்ளியும் கூறியுள்ளது. மனமுடைந்த அந்தச் சிறுவனின் பெற்றோர், தங்கள் வழக்கில் ஆசிரியர்களையும் ஊழியர்களையும் கடுமையாகச் சாடினர். அவர்கள் தங்கள் மாணவர்களைச் சரியாகக் கண்காணிக்க முடியாத அளவுக்கு "தங்கள் கைபேசிகளில் மிகவும் மும்முரமாக" இருந்ததாகக் குற்றம் சாட்டினர். மேலும், பள்ளியில், "யாரிடமும் சொல்லக்கூடாது" என்ற கொள்கையைக் கொண்டிருந்ததாகவும், அது "பள்ளியில் என்ன நடந்தது" என்பதை மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறுவதைத் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது அந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்கள் கூறுகின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com