ஆசிரியர் ஒருவர் தான் தத்தெடுத்த இரண்டு பதின்வயதுச் சிறுவர்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, முறையற்ற உறவுமுறைக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூபோர்ட்டைச் சேர்ந்த 35 வயதான ஆம்பர் ஸ்வைன், முதல் மற்றும் இரண்டாம் நிலை முறையற்ற பாலியல் உறவு குற்றச்சாட்டின் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். நியூபோர்ட் பள்ளி மாவட்டத்தின் மாற்று உயர்நிலைப் பள்ளியான பெண்ட் ஓரில் ரிவர் பள்ளியில் ஸ்வைன் ஆசிரியராகவும் இயக்குநராகவும் பணியாற்றிய வந்துள்ளார். இரண்டு பதின்ம வயது சிறுவர்கள் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து வாஷிங்டன் குழந்தைகள், இளைஞர் மற்றும் குடும்பங்கள் துறை, ஷெரிஃப் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டதை அடுத்து, மே 18 அன்று இந்த விசாரணை தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
செவ்வாயன்று துப்பறிவாளர்கள் ஸ்வைனிடம் விசாரணை நடத்துவதற்கு முன்பு, புலனாய்வாளர்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த பதின்மவயது சிறுவர்களிடம் விசாரணைகளை நடத்தினர். ஷெரிஃப் அலுவலகத்தை மேற்கோள் காட்டும் அறிக்கைகளின்படி, அவரைக் கைது செய்வதற்குப் போதுமான முகாந்திரம் இருப்பதாக துணை அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்வைன் மறுநாள் பெண்ட் ஓரில் கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நீதிமன்றச் செய்திகளின்படி, விசாரணையின் போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் டோலி ஹன்ட் 50,000 டாலர் பிணைத்தொகை கோரியதோடு, ஸ்வைன் சிறையிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரைத் தொடர்பு கொள்ள முயன்றதற்கான ஆதாரம் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நீதிபதி ராபின் மெக்ரோஸ்கி ஜாமீன் தொகையை 20,000 டாலராக நிர்ணயித்தார்.
18 வயதுக்குட்பட்ட எவருடனும் தொடர்பு கொள்வதைத் தடைசெய்வது, அவர் வாஷிங்டன் மாநிலத்தில் தங்கியிருக்க வேண்டும் மற்றும் சட்ட ஆலோசகருடன் தவறாமல் தொடர்பில் இருக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தும் கடுமையான நிபந்தனைகளின் பேரில், ஸ்வைன் விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து, சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் அளித்த பேட்டிகளில், அந்தச் சிறுவர்களில் ஒருவன் தனக்கு 18 வயது ஆவதற்கு முன்பே ஆசிரியர் ஸ்வைனுடன் பாலியல் உறவு கொண்டிருந்ததை ஒப்புக்கொண்டார். சட்ட அமலாக்க அதிகாரிகளுடனான நேர்காணல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, இருவரும் "பலமுறை" உடலுறவு கொண்டதாக அந்தப் பதின்ம வயது சிறுவன் புலனாய்வாளர்களிடம் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புலனாய்வாளர்கள் ஸ்வைனிடம் விசாரணை நடத்தியபோது, அந்தப் பதின்வயதுச் சிறுவனுடன் உடலுறவு கொண்டதை அவர் ஆரம்பத்தில் மறுத்ததாக அந்தத் தொலைக்காட்சி நிலையம் செய்தி வெளியிட்டது. ஆனால் பின்னர் அவர், அந்தச் சிறுவர்களில் ஒருவனுக்கு 18 வயது பூர்த்தியான பிறகு, பிப்ரவரி மாதம் சிறுவனுடன் உடலுறவு கொண்டதை சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தினார்.
பின்னர் பாதிக்கப்பட்ட மற்றொரு பதின்வயது இளைஞர், மே மாதம் இருவரும் படுக்கையில் இருந்தபோது ஸ்வைனுடன் உடலுறவு கொண்டதாக புலனாய்வாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஸ்வைன் அதை நிறுத்துவதற்கு முன்பு, அந்தச் சம்பவம் சில நிமிடங்கள் நீடித்ததாக அவர் சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டிருந்தபோது ஸ்வைன் அந்தப் பதின்வயதினரைத் தொடர்புகொண்டதாகக் கூறப்படுவதால், அவர் மீண்டும் தொடர்புகொள்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கோரியுள்ளதாக நீதிமன்றம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.