தன் கணவரால் லோரினா என்ற பெண் துன்புறுத்தப்பட்டதாகவும், அதை அவர் எவ்வாறு எதிர்த்துப் போராடினார்? என்றும் வெளியான செய்திகள் தலைப்புச் செய்திகளாக மாறியுள்ளது.
அந்தத் தம்பதியினர் 1989 ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டு, பின்னர் வர்ஜீனியாவிலுள்ள மனாசாஸ் நகரில் குடியேறியுள்ளனர். லோரெனா வெனிசுலாவிலிருந்து மாணவர் விசா மூலம் சமூகக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதும், ஜான் கடற்படை அதிகாரிகளுக்கான விருந்து ஒன்றில் கலந்துகொண்டு கடற்படையில் சேர்ந்திருந்தபோதும் அவர்கள் சந்தித்துள்ளனர். "ஜான் மிகவும் அழகானவர் என்று நான் நினைத்தேன். நீலக் கண்கள். சீருடை அணிந்த ஒரு மனிதர், தெரியுமா? அவர் கிட்டத்தட்ட ஒரு சின்னம் போல இருந்தார். நாட்டிற்காகப் போராடும் ஒரு கடற்படை வீரர். இந்த அழகான நாட்டின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது," என்று அவர் தெரிவித்துள்ளார். "நான் மெய்மறந்து போனேன். எனது அமெரிக்கக் கனவை நான் விரும்பினேன்" என்று மேலும் கூறினார்.
தங்களுக்கு திருமணம் ஆகி ஒரு மாதத்திலேயே துன்புறுத்தல் தொடங்கியதாகவும், அது வாய்மொழித் தாக்குதல்களில் இருந்து பாலியல் வன்கொடுமையாக முற்றியதாக லோரெனா குற்றம் சாட்டியுள்ளார். குடும்ப வன்முறை புகார்கள் காரணமாக ஆறு வெவ்வேறு முறை அவர்களது வீட்டிற்கு காவல்துறை வரவழைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு சம்பவத்தில், அவர்கள் இருவர் மீதும் தாக்குதல் மற்றும் அடித்து உதைத்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
பின்னர், 1993 ஜூன் மாதம் ஒரு இரவு, ஜான் இரவு முழுவதும் மது அருந்திய பிறகு வீட்டிற்கு வந்து, உறங்குவதற்கு முன்பு தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார். விரக்தியடைந்த லோரினா சமையலறை மேடையிலிருந்து ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு, படுக்கையறைக்குத் திரும்பிச் சென்று தன் கணவரின் ஆணுறுப்பை துண்டித்துள்ளார்.
இது ஒரு பெருங்குற்றம் என்று கூறி, இதில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும், பல ஆண்டுகளாகத் தனக்கு நேர்ந்த தொடர் துன்புறுத்தல்கள் குறித்த லோரெனாவின் வாக்குமூலத்தைப் பார்வையாளர்கள் கேட்டனர். தனது செயல்கள் மன அதிர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட எதிர்வினை என்று கூறி அவர் தன்னைத் தற்காத்துக் கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
லோரினாவின் வாக்குமூலத்தின் விளைவாக, ஜான் மீது திருமண வாழ்வில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. விசாரணைகளுக்குப் பிறகு, ஜான் ஆபாசத் திரைப்படத் துறையில் ஒரு தொழிலைத் தொடங்க முயன்றுள்ளார். மேலும், இரண்டு வெவ்வேறு பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு, அந்தக் குற்றங்களுக்காகச் சிறைத் தண்டனையும் அனுபவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.