71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை....!!

71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை....!!

மத்திய அரசின் வேலைவாய்ப்புத் திருவிழாவின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும், ரயில்வே உள்ளிட்ட துறைகளில் புதியதாக அரசு பணிகளில் சேரவுள்ள 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

ரோஸ்கர் மேளா:

படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப அரசு வேலைவாய்ப்புகளை அளிக்கும் நோக்கில் மத்திய அரசு ரோஸ்கர் மேளா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  அதன்படி அரசு பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தமாக பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது.

பணி நியமன ஆணை:

இதன் தொடர்ச்சியாக, ரயில் மேலாளர், நிலைய மேலாளர், காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் என அரசின் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை  காணொலி மூலம் பிரதமர் மோடி வழங்கினார்.  மேலும், இவர்களுக்கு ஆன்லைன் முறையில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வாழ்த்து:

இதனைதொடர்ந்து பேசிய பிரதமர், தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு வேலைகள் வழங்கும் பணி வேகமாக நடந்து வருவதாக தெரிவித்தார்.  மேலும் 40 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்கியுள்ளதாக கூறிய அவர், பணி நியமன ஆணைகளை பெற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

இதையும் படிக்க:    10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு.... அதிமுக – திமுக இடையே காரசார விவாதம்!!!